islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு


சவூதி அரேபியாவின் மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள் செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ் அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

பால் அருந்தினால் பலசாலி ஆகலாம்!



நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

உடல் தானம் செய்வதில் சேலம் முதலிடம்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணித் திறன் பயிற்சி: நாஸ்காம் – விப்ரோ கூட்டு முயற்சி


தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் பட்டதாரிகளுக்கு பணித் திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நாஸ்காம் அமைப்பும், விப்ரோ நிறுவனத்தின் மிஸ்ஸன் 10x அறக்கட்டளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

இன்ஃபோஸிஸின் இஸ்லாமிய ஃபோபியா


ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

ஓசோன் ஓட்டையால் மழை அதிகரிப்பு




அண்டார்ட்டிக்கா பகுதியில் ஓசோன் மண்டலத்தில் உள்ள ஓட்டையினால் புவியின் தெற்குப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் மழையின் அளவு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் கலவரம்: "துணைநின்றார் மோடி"




குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..

"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!

அணு சக்தி வேண்டவே வேண்டாம்: 9 நோபல் அறிஞர்கள் வேண்டுகோள்


அணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"விக்கி லீக்ஸின்' மறுபக்கம்: இன்று டிஸ்கவரி சேனலில் வெளியீடு


இணையதளத்தில் ரகசியங்களை அம்பலப்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் இணையதளம் தொடர்பான ஆவணப் படம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) வெளியாகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி சார்பில் மதுரையில் கல்விக் கண்காட்சி நாளை தொடக்கம்




தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.23), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) ஆகிய இரு நாள்கள் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு: முத்தாலிக் மீது குற்றப்பத்திரிகை

குஜராத்தில் மோடிக்கு பின்னடைவு: காந்திநகர் மாநகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!


குஜராத் மாநிலத்தில் தலைநகர் காந்திநகர் பகுதியை உள்ளடக்கிய மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிவிட்டது. இந்த வெற்றி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பெருத்த பின்னடைவு என்று கருதப்படுகிறது.

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி


ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

சிரியாவின் கலவரத்திற்கு காரணம் அமெரிக்கா தான்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்


அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்காவே காரணம் எனவும், போராட்டத்துக்குப் பண உதவி செய்வதாகவும் விக்கிலீக்ஸ் அதிர்ச்சிகர செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!


இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்
கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்பதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் ஆவேசம்!


“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியாஎன்றும், பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடல் மீன்கள் உடலில் கதிர்வீச்சு பரவியது: மீன் பிடிக்கத் தடை


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமாவில் உள்ள அணு உலை பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவியது.

சீனாவில் எய்ட்ஸ் நோய் தீவிரம்: 7 இலட்சம் பேர் பாதிப்பு


சீனாவில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி இதுவரை அந்நாட்டில் 68 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

ஆல்கஹால் அருந்தியிருந்தால் வண்டி நகராது


வண்டியை ஓட்டுபவர் குடிபோதையில் இருந்தால் தானாக என்ஜின் மூடிக்கொள்ளும் பூட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

மதுபான விற்பனை 18,062 கோடி ரூபாய் - கடந்த ஆண்டைவிட 2,229 கோடி அதிகம்



தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட 2,229 கோடி ரூபாய் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆஅண்டில் மட்டும் 18,062 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசில் குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 2-8, 9-15 தேதியிட்ட "எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் வெளியாகியுள்ளது.

உயர் கல்வியுடன் திறமையான இளைஞர்கள் தேவை: அப்துல்கலாம்


மாணவர்களின் கல்வியறிவை வளர்க்க உயர் கல்வியுடன் கூடிய திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றனர் என்று என்று குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

National Defence Academy (N D A) தேசியப் பாதுகாப்பு அகாதெமி


ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாதெமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.

ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?



சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்


குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அஞ்ச வைக்கிறது அஞ்சல் வோட்டு!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டாலும், வாக்கு எண்ணும் நாளான மே 13-ம் தேதி காலை 7 மணி வரை தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பெறுவதற்காக அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களது அலுவலகத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1000 பேருக்கு சிறை: டெல்லி


டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக அளவில் விபத்து நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்


இந்தியாவில், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும் என்று கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட


உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவு: பெண் காவலர் புகார்



காவல்துறை உயரதிகாரிகளால் பெண் காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.இ. சேர விண்ணப்பம் எப்போது?


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. படிப்புகளில் சேர மே 15-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பி.இ. படிப்பில் 2.1 லட்சம் இடங்கள்: மன்னர் ஜவஹர்



பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

இந்தியாவில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துபவர் விபரம்: குஜராத்தில் 58 சதவீதம்



குஜராத் மாநிலத்தில் 58 சதவீத குழந்தைகள் 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைதடுமாறாத நீதிபதி!


தில்லியில் நடந்த ஐந்தாவது எம்.சி. சீதல்வாட் நினைவுச் சொற்பொழிவின்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள்வரை உள்ள அத்தனை நீதிபதிகளும் கவனத்தில்கொள்ள வேண்டிய, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள். அவர் தெளிவுபடுத்தி இருப்பதுபோல, ஒவ்வொரு நீதிபதியும் சட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியைச் சரியாகவும் துல்லியமாகவும் புரிந்துகொண்டு விட்டால், பிறகு நீதிமன்றம் வரம்பு மீறுகிறது என்கிற குற்றச்சாட்டோ, நிர்வாகத்துக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமோ ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்


பிரிட்டனில் பர்தா அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!


“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 2 (நூல்: ரஹீக்)


வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர்.

முதல் மலேகான் குண்டுவெடிப்பு பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்: ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ


கடந்த 2006-ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.

கிழக்கு உத்திரபிரதேசம் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கையில்


‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் பிஜேபி-யின் லோக் சபா எம்.பியும் கோரக்நாத் பீத்தின் வாரிசுமான யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது.

அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் விபரங்கள் வெளியானது


லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் அன்னா ஹஸாரேவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன.

ரூ.20 கோடி விலையில் அஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்


ஜேம்ஸ்பாண்டு படங்களில் புயல்வேகத்தில் பறக்கும் அஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மோடியைப் புகழ்ந்ததை ஹசாரே வாபஸ் பெறுவார்: சுவாமி அக்னிவேஷ்



தான் சேகரித்துவைத்திருக்கும் தகவல்களை அளித்தபின்னர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியதை அண்ணா ஹசாரே வாபஸ் பெறுவார் என சமூக நல ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார்.

மதுரை மேற்குத் தொகுதியில் ரூ.81 லட்சம் விநியோகம்: உளவுப் பிரிவு நேரடி விசாரணை



தேர்தலுக்கு முன்னதாக மதுரை மேற்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ. 81 லட்சம் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, ஐ.பி. (இண்டலிஜன்ட் பீரோ) உள்ளிட்ட போலீஸ் உளவுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை முதல் முகாமிட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசின் முன்னுள்ள மெட்ரிக் பள்ளிப் பிரச்னை


எவ்விதமான குழப்பங்களுக்கும் இடமில்லாமல் சரியான வழியில் செயல்பட வேண்டியது ஒரு மாநிலத்தின் கல்வித்துறை. ஆனால், அப்படிப்பட்ட செவ்விய நிலை தமிழகக் கல்வித்துறையில் தற்போது இல்லை.

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்


ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.

80, 100 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை: மக்கள் வியப்பு




நேற்று கர்நாடக மாநிலத்தில் பலத்த காற்றுடன் 80 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை பெய்தது.

226 பெண்களின் கர்ப்பப்பையை அகற்றிய அதிர்ச்சி சம்பவம்



சாதாரண வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த 226 பெண்களின் கர்ப்பப் பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்த 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது.

துக்கத்தில் தனது விரலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மனிதர்