islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மாலேகான் குண்டுவெடிப்பு: முத்தாலிக் மீது குற்றப்பத்திரிகை


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த பிரவீண் முத்தாலிக்குக்கு எதிராக மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு விசாரணைக்குழு வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவருக்கும் ராமசேனை அமைப்பைச் சேர்ந்த பிரமோத் முதாலிக்குக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.மாலேகான் வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முத்தாலிக், கடந்த ஜனவரி 31-ம் தேதி கர்நாடக மாநிலம் கோகாக் நகரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், முதாலிக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் குற்றப்பத்திரிகை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

வெடிபொருள்கள் சட்டம், மகாராஷ்டிர மாநிலத்தின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் முத்தாலிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து அவர் ஏற்கெனவே பயிற்சி எடுத்திருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment