islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மன...ைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!


                                          
காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மன...ைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மகேஷ் குமாரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மகேஷ் குமார் நேற்று காலை அவருடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் தன் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் மகேஷ்குமார் காவல்துறையினருக்குத் தன் மனைவியினைக் கொலை செய்வதற்கான காரணத்தை விவரித்து உருக்கமான கடிதம் ஒன்று எழுதி உள்ளார். முழுமையாக ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் காவல்துறையினர் வெளியிட்ட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் மகேஷ்குமார் எழுதியுள்ள விவரம் வருமாறு:

"மதிப்புக்குரிய காவல்துறையினருக்கு,

எனக்குத் தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதைச் செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானதுதான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்குக் கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் `சாரி' என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரைச் சரி செய்துகொள்கிறார்கள். அப்படியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும்

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தத் தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதைப் புரிந்து கொண்டுத் தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்தக் காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்குப் பயணித்தது அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்தக் குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்தக் காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனைப் போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாம்(ஷமிலா)வுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

என் அருமை ஷாம்!

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், 'சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்குத் தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன், அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளைப் பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையைச் சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரைத் தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னைப் பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா "என்னிடம் நீ போ, என்னுடன் வராதே" என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள். அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளைப் பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

நன்றி, மன்னிப்புடன்..."

மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், தன் மனைவி ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 10 பேரின் பெயர், அவர்களது முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் மகேஷ்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடிப்படையிலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!


                              

பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால், சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும்.


இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட, இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது. பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்


                                  

மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் வாடும் வேளையில் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும் அதனைத் தொடர்ந்தும் மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அளித்தது பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் பதவியில் நீடிப்பதற்கான அனுமதியுமாகும்.


                                                  பி.சி.பாண்டே(1970பாட்ச்):-
                                                  

இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.

1000 முஸ்லிம்கள் அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.

2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நியமித்தது. இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் உயர்நீதிமன்றத்தை அணுகினார். குஜராத் வழக்குகளின் விசாரணை பொறுப்புகளிலிருந்து நீதிமன்றம் பாண்டேவை நீக்கியது. பின்னர் 2004 அக்டோபரில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் டி.ஜி.பியாக பதவியேற்றார்.

2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாண்டே குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

                                            
                                            எ.கெ.பார்கவா(1967பாட்ச்):-

2004 பிப்ரவரியில் குஜராத் மாநில டி.ஜி.பி. 200 கோடி வருடாந்தர பட்ஜெட்டை கொண்ட குஜராத் போலீஸ் வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு கலவர வழக்குகளை மீளாய்வு செய்து தள்ளுபடிச் செய்ய முயற்சி மேற்கொண்டார். இவ்வாறு தள்ளுபடிச் செய்யப்பட்ட வழக்குகளில் பாந்தர்வாடா கூட்டு கல்லறை வழக்கும் அடங்கும்.


                                          ஜி.சி.ராய்கார்(1972பாட்ச்):-

இனப்படுகொலை நடந்த2002 பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே குஜராத் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக அரசு நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார். இந்த கூட்டங்களின் மினிட்ஸ்(நிகழ்ச்சி நிரல் பதிவேடு)காணாமல் போயின. ஓய்வு பெற்ற பிறகு குஜராத்தில் போலி மதுபானத்தால் ஏற்பட்ட துயர சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் நீதி விசாரணை கமிஷனின் உறுப்பினரானார். இன்னும் பல பதவிகளும் வழங்கப்பட்டன.


                                         எம்.கே.ராண்டன்(1976பாட்ச்):-

இனப்படுகொலை நடக்கும் வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் துணை கமிஷனர். பின்னர் சூரத் ஐ.ஜியாக இட மாற்றம். 2005 ஜூலை மாதம் காந்திநகர் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு. குல்பர்க் சொச்சைட்டியிலும், நரோடா பாட்டியாவிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலையும், பாலியல் வன்புணர்வு நடத்துவதற்கு வசதிகளை செய்துக் கொடுத்தார்.


                                                      தீபக் ஸ்வரூப்(1977பாட்ச்):-
                                                        

2002-ஆம் ஆண்டு வதோதரா ரேஞ்ச் ஆபீஸர். வதோதரா ரூரல், கோத்ரா, தாஹோத், நர்மதா ஆகிய மாவட்டங்கள் இவருடைய அதிகார வரம்பிற்குள் இருந்தன. இவையெல்லாம் இனப்படுகொலையின் வேளையில் முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலைச் செய்த இடங்களாகும்.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். பெஸ்ட் பேக்கரி கூட்டுப்படுகொலையில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. வழக்கிலிருந்து கஷ்டப்பட்டு தப்பினார். பின்னர் சூரத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார். தற்பொழுது 13 ஆம்ட் பட்டாலியனின் கூடுதல் டி.ஜி.பி பதவி வகிக்கிறார்.


                                              கெ.நித்யானந்தன்(1977பாட்ச்):-

                                                 


2001-2005 காலக்கட்டத்தில் உள்துறை செயலாளர். 2005-ஆம் ஆண்டு ராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனர் ஆனார். டி.ஐ.பி, கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு. இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து தவறான அறிக்கைகளை மத்திய தேர்தல் கமிஷன், தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் நீதிமன்றங்களுக்கு அளித்தார். தற்பொழுது போலீஸ் வீட்டு வசதிவாரிய மேலாண்மை இயக்குநர்.


                                        ராகேஷ் அஸ்தானா(1984பாட்ச்):-

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிறப்புக் குழுவின் தலைவர். இனப் படுகொலையை நியாயப்படுத்த கோத்ரா ரெயில் எரிப்பு மிகப்பெரிய சதித்திட்டம் என்ற சித்தாந்தத்திற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியவர்.
2003 பிப்ரவரி மாதம் வதோதரா ரேஞ்ச் ஜூனியர் ஐ.ஜியாக பதவியேற்றார். தற்பொழுது வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கிறார்.


                                                       எ.கே.ஷர்மா(1987பாட்ச்):-

                                                       

மெஹ்ஸானா மாவட்ட எஸ்.பியாக பதவி வகித்தார். பின்னர் காந்திநகர் எம்.பி ஆனார். இனப் படுகொலையின் போது ஏராளமான குற்றங்களில் நேரடியாக பங்குபெற்றார். இவரை மாற்றாமல் தேர்தலை நடத்தமுடியாது என மத்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து எஸ்.பி பதவியிலிருந்து மாற்றப்பட்டார். தேர்தலுக்கு பிறகு மோடி இவரை மீண்டும் எஸ்.பியாக நியமித்தார்.

ஸதர்புரா உள்ளிட்ட மெஹ்ஸானா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டுப் படுகொலைகளுக்கு உதவி அளித்தவர் ஷர்மா. பின்னர் காந்திநகர் ஐ.ஜியாக பதவியேற்றார்.

   
                                                     சிவானந்த ஜா(1983பாட்ச்):-

                                                            

2002-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் மாநகர கூடுதல் கமிஷனராக நியமனம். நானாவதி கமிஷனின் முன்பு மோடியை தப்பவைக்க வாக்குமூலம் அளித்தவர். 2005 பிப்ரவரியில் உள்துறை செயலாளர் ஆனார். அரசுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை தயார் செய்தவர்.

இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரிக்க ஸாகியா ஜாஃப்ரி அளித்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் குஜராத் அரசு சிவானந்தனையும் நியமித்தது. இவரின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து சூரத் ரேஞ்ச் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.


                                                சுதீர் கெ.சின்ஹா(1976பாட்ச்):-

                                                        

2003 ஆம் ஆண்டு முதல் வதோதரா நகர போலீஸ் கமிஷனர். பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஷாஹிரா ஷேக்கிற்கு பணம் அளித்தும், மிரட்டியும் வாக்குமூலத்தை மாற்றச் செய்தததன் பின்னணியில் சின்ஹாவின் கரங்கள் உள்ளன.

2005 பிப்ரவரியில் சூரத் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.


                                             டி.ஜி.வன்சாரா(1967பாட்ச்):-

                                                   

மோடிக்காக போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி புகழ் பெற்றார். மே 2002 முதல் ஜூலை 2005 வரை அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் துணை கமிஷனராக பதவி வகித்தார்.

2005 ஜூலையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையின் டி.ஜ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். மோடிக்காக இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட ஏராளமானவர்களை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தார். தற்பொழுது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


                                        எஸ்.எஸ்.காந்த்வாலா(1973பாட்ச்):-

                                                          

இனப் படுகொலைத் தொடர்பான 2000 வழக்குகளை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் கோல்மால் செய்து குஜராத் அரசுக்கு உதவிய அதிகாரி. சாட்சிகளை மிரட்டியும், அவமானப்படுத்தியும் வழக்குகளை பலவீனப்படுத்த முயன்றார்.
2004-ஆம் ஆண்டு மனித உரிமை மீறல் தொடர்பாக இவரை நீதிமன்றம் தண்டித்தது. எல்லா சட்டங்களையும் மீறி மோடி 2009-ஆம் ஆண்டு இவரை டி.ஜி.பியாக நியமித்தார். 2010 ஆகஸ்டில் ஓய்வு பெறவேண்டிய இவருக்கு 3 மாதங்கள் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது.


                                          ஜெ.மஹாபத்ரா(1974பாட்ச்):-

2002 செப்டம்பர் மாதம் முதல் குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பி. அரசுக்கு ஆதரவாக ஏராளமான அறிக்கைகளை இட்டுக் கட்டினார். கொலைக் குற்றவாளியான குஜராத் அமைச்சர் அசோக் பட்டை பாதுகாக்க எஃப்.ஐ.ஆரில் பல்டியடித்து வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து அஹ்மதாபாத் நகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
2008-ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற பிறகும் மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினரானார்.


                                                    ஒ.பி.மாத்தூர்(1975பாட்ச்):-

                                                              

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலைத் தொடர்பான ஆதாரங்களை அழித்தவர்களில் முக்கியமானவர். மோடியின் உறவினர். டி.ஜி.பியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு குஜராத் செக்யூரிட்டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். பட்டமேற்படிப்பு மட்டுமே படித்துள்ள ஒரு அதிகாரிக்கு முதன்முறையாக உயர்வான பதவி அளிக்கப்பட்டது.


                                                எ.ஐ.சயீத்(1978பாட்ச்):-

                                                        

இனப் படுகொலையைத் தொடர்ந்து இழந்த முஸ்லிம்களின் ஆதரவை தேர்தல் காலத்தில் மீண்டும் பெறுவதற்கு மோடிக்கும், சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடைத்தரகராக செயல்பட்டார். கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பொறுப்புகளை வகித்தவர். ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.கவில் சேர்ந்தார்.


                                         பி.பி.பாண்டே(1980பாட்ச்):-

                                                    

இனப்படுகொலை நிகழ்ந்த உடனேயே அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் பொறுப்பை ஏற்றார். வழக்குகளை மூடி மறைப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.


குல்பர்க்,நரோடாபாட்டியா வழக்குகளை தில்லு முல்லு நடத்தினார். அஹ்மதாபாத் மாநகர க்ரைம்ப்ராஞ்ச் தலைவராக பதவி வகிக்கும் வேளையில்தான் பெரும்பாலான போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. பின்னர் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.


                                   ஆஷிஷ் பாட்டியா(1985பாட்ச்):-

                                                   

பி.பி.பாண்டேவுக்கு பிறகு அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக பதவியேற்றார். டி.ஜி.வன்சாராவுடன் ஏராளமான தாக்குதல்களில் பங்காளியானார். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் பாகமாக, ஆதாரங்களை அழித்த அதிகாரிகளை காப்பாற்ற முயன்றார். தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகளும் மூடப்பட்டதன் பின்னணியில் பங்கு வகித்தார்.