islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மத்ஹபுகள் ஓர் இஸ்லாமியப் பார்வை

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 06:153)

இப்பகுதியில் மத்ஹபுகளும் அவைகளிலுள்ள இஸ்லாத்திற்கு முரணான சட்டங்களும் தெளிவாக இடம்பெற உள்ளது.
மத்ஹபுகள் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்?
இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
இம் மத்ஹபுகளே அநேக அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற அடிப்படைக் காரணியாக அமையும். இம் மத்ஹபுகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்கு நாம் இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்.
1. குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளின் சட்டங்கள் தெளிவாக மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படல்.
2. மத்ஹபுகளிலுள்ள குர்ஆன், ஸுன்னாவை அவமதிக்கும் சட்டங்கள், புத்திக்குப் பொருந்தாத ஆபாசத்தை அள்ளியிறைக்கும் விளக்கங்கள், மத்ஹபை பின்பற்றுபவர்களே பின்பற்றாத மத்ஹபிலுள்ள சட்டங்கள் போன்றவைகளை மக்கள் முன் சமர்ப்பித்தல்.


இவ்விரண்டு விடயங்களும் மக்களுக்கு தெளிவாக போதிக்கப்பட்டால் அப்பாவி மக்கள் தங்களைத் திருத்திக் கொண்டு தூய இஸ்லாத்தை விளங்கி தமது மறுமை வாழ்வுக்கு உதவக்கூடிய வணக்க வழிபாடுகள் எது என்பதை இனங்கண்டு கொள்வார்கள்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் கூறும் விடயங்களை தெளிவாக சிந்தித்து செயற்பட இறைவன் துணை புரிவானாக!
‘எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை.’ (அல்குர்ஆன் 36:17)
‘மத்ஹபு’ என்பதன் பொருள்
மத்ஹபு என்ற சொல்லுக்கு வழிமுறை, போக்கு, கருத்து என்று பொருள்படும். மக்கள் அன்றைய காலகட்டங்களில் தங்களிடம் இருந்த இமாம்களிடம் சந்தேகங்களைக் கேட்பர். அந்த சந்தேகம் பற்றி பின்பு அவர்கள் உரையாடும்போது இது ஷாபியி இமாம் மத்ஹபு(ஷாபியின் கருத்து) இது மாலிகி மத்ஹபு(மாலிகின் கருத்து) இப்படிப் பேசிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு பேசும்போது பயன்படுத்திய வார்த்தை நிலைத்து இறுதியில் ‘மத்ஹபு’ என்பது இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.
சொல் ரீதியாக ஆராயும்போது ‘தஹப’ என்ற பதத்திலிருந்து பிறந்த ஒரு சொல்தான் மத்ஹபு என்ற சொல்லாகும். ”தஹப’ என்றால் போனான் என்பது பொருள். ‘மத்ஹபு’ என்றால் போகுமிடம் என்று பொருள்படும். எனவேதான் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘நபியவர்கள் மத்ஹபுக்குப் போக நாடினால் தூரமாகுவார்கள்.’ (ஆதாரம்: அபூதாவுத்-01)
இவ்விடத்தில் ‘மத்ஹபு’ என்ற சொல் ‘கழிவறை’ எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் நான்கு மத்ஹபுகள் மட்டுமே உள்ளன. அவை ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹன்பலி என முஸ்லிகள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணமாகும். இஸ்லாத்தில் பல மத்ஹபுகள் உண்டாயின. அவைகளில் முக்கியமான வைகளாக பின்வருபவற்றை குறிப்பிடலாம்.
1. சைதி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவரின் பெயர் ‘சைத் பின் அலி’ என்பதாகும். இவர் ஹுசைன்(ரழி) அவர்களின் வழித்தோன்றலாவார். நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகினறது. கி.பி.700க்குப் பின் மதீனாவில் பிறந்து 740ல் மரணமடைந்தார். இவர் இமாம் அபூஹனிபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் நாட்டில் இம் மத்ஹபு இன்றும் கூட பின்பற்றப்படுகிறது.
2. அவ்சாயி மத்ஹபு
இம்மத்ஹபின் தலைவரின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் அல் அவ்சாயி என்பதாகும். இவர் கி.பி.708ல் பிறந்து 774ல் மரணமடைந்தார். இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவரும் இமாம் அபூஹனீபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ழாஹிரி மத்ஹபு
இம் மத்ஹபின் ஸ்தாபகர் பெயர் தாவுத் இப்னு அலி என்பதாகும். இவர் கி.பி.715ல் கூபாவில் பிறந்து 883ல் மரணமடைந்தார். ஸ்பெயின் போன்ற நாடுகளில் இம் மத்ஹபு காணப்படுகிறது. இவர் இமாம் ஹன்பலியின் காலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
4. லைதி மத்ஹபு
இதைத் தோற்றுவித்தவர் லைத் என்பவர் என்று கூறப்படுகின்றது. இவர் எகிப்தில் கி.பி. 716ல் பிறந்து 791ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. தவ்ரி மத்ஹபு
இம் மத்ஹபுக்குச் சொந்தக்காரரின் பெயர் சுப்யானுத் தவ்ரி என்பதாகும். இவர் கி.பி. 719ல் கூபாவில் பிறந்து 777ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
6. ஜரீரி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவர் முஹம்மது இப்னு ஜரீர் இப்னு யஸீத், என்பவராவார். கி.பி.839ல் பிறந்து 929ல் மரணமடைந்தார்.
ஆகவே மத்ஹபுகள் என்பது நான்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இன்னும் பல உண்டு என்பதை அறியலாம். ‘மத்ஹபு’ என்பது அந்தந்த இமாம்களின் கருத்தை அடிப்படையாக்க கொண்டு இருந்ததே தவிர அழ்ழாஹ்வாலும் அவனுடைய தூதராலும் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மத்ஹபுகள் மறைந்தமைக் கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் போனமை.
3. இம்மத்ஹபுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கூடுதல் கவனம் செலுத்தாமை.
நான்கு மத்ஹபுகளான ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹம்பலி ஆகியவைகள் இன்றுவரை நிலைத்தமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இந்நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோர் அதிகமாக இருந்தமை.

2. ஆட்சியாளர்கள் இம்மத்ஹபுகளுக்கு ஆதரவாக இருந்தமை.
இதனால்தான் இவைகள் நிலைத்ததேயன்றி இறைவனின் அங்கீகாரத்தால் அல்ல. இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.



ஹனபி மத்ஹபு

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். 
   தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.

    இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.

    ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். “உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி” எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.

    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.

    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி “முஅத்தா முஹம்மது” என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் “இமாமுல் அஃலம்” எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.

    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.

இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
 ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
  நூல்கள் ஹிஜ்ரிநூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  9.ஜாமிஉல்ருமூஸ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  13.சல்பீ 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  14.பஹ்ரு ராயின் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  15.தன்வீர் அப்ஸார் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  16.தகீரா 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  17.துர்ருல் முக்தார் 11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
  18.ஃபதாவா ஆலம்கீரி 12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்
 இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள “ஃபதாவா ஆலம்கீரி” மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் “ஃபத்வா” (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.

    இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய “முஅத்தா மாலிகி” நூலுக்கு விளக்கம் தந்து “அவ்ஜஜுல் மஸாலிக்” என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் “முஹன்னஃபுல் மாலிகி” மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.

    எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.

    அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

நான்கு வழிகள்-நான்கு ஆறுகள்

இஸ்லாம் கற்றுத்தராத நான்கு வழிகள் இமாம்கள் பெயரில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அவை ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி எனத் தெரிந்த ஒன்றுதான். இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின்  கொள்கையாம். உலகத்தில் எந்த தத்துவமாக இருந்தாலும் ஒரு வழிமுறையைத்தான் அவர்கள் கொள்கையாகக் கூறுவார்கள். ஆனால் மத்ஹப்வாதிகளிடம் நான்கு வழிமுறைகள்.
    ஒவ்வொரு மத்ஹப்வாதிகளும் தங்கள் மத்ஹபை உயர்த்திப் பேசுவதும் மற்றதை தாழ்த்துவதும் வாடிக்கை. ஹனபி பிக்ஹூ நூலில் ” இந்த அடியானின் மீது அல்லாஹுத்தஆலா ஷரியத்தைப்பற்றி மெய்ஞான ரகசிய ஒழியை பாய்ச்சியபோது அந்த வெளிச்சத்தில் அனைத்து மத்ஹபுகளையும் குறிப்பாக நான்கு மத்ஹபுகளையும் நன்கு நோட்டமிட்டேன். அவை ஒவ்வொன்றும் ஆறுகள் வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்தன.
    அந்த நதிகளில் அதிகப் பெரியதாகவும் அதிக நீளம் உடையதாகவும் ஹனபி மத்ஹபைக் கண்டேன். அதாவது எல்லா மத்ஹபுகளிலும் பெரிய மத்ஹபும், நீண்ட காலம் நிலைத்திருப்பதும் ஹனபீ மத்ஹப் ஒன்றுதான் என்பது எனக்குப் புலனாகிறது.”
    இவ்வாறு மெய்ஞான ஒழியில் ஹனபீ ஆறு ஓடுவதைப் பார்த்ததாகப் பகல் கணவு கண்டவர் அல்லாமா ஷாஃரானீ அவர்கள் தமது நூலான ‘மீ ஜானுல் இஃதிதாலில்’ சிறப்பித்து கூறுகிறார். மேலும் இதே நூலில் நபித்துவத்தின் பரிபூரண சுடர்கள் ஹனபீ மத்ஹப்புடன் இணைந்து நிற்கின்றன என்பதும் அவருக்குப் புலனாகின்றதாகப் புலம்புகிறார்.
    ஈஸா(அலை) அவர்களும் ஹனபி மத்ஹப்தான்
    இவர்களின் ஹனபீ மத்ஹபு வெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறதென்றால்  நபிமார்களுக்கும் ஹனபீ லேபிள் ஒட்டும் அளவிற்கு முற்றி உள்ளது. அதாவது கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப்பத்தில் அனுப்பபடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது அவர் ஹனபீ மத்ஹபு பிரகாரமே செயல்படுவார். நூல்: ஃபுஸிலே ஸித்தா
    ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபீ மத்ஹப்பிற்காகவே செயல்படுவார் என்று இமாமே ரப்பானீ முஜத்திதே அல்ஃபதானி அவர்கள் போற்றி புகழ்ந்து கூறுகிறார்களாம். இப்லீஸ் அல்லாஹ்விற்கே பாடம் போதித்தது போல் இப்லீஸ் ஏஜண்டுகளும் அல்லாஹ்விடமிருந்து ஷரியத் சட்டத்தை வாங்கி வந்த நபிமார்களுக்கே மத்ஹப் சட்டத்தை போதிக்க துணிந்து விட்டார்கள்.
    தமது  மத்ஹப்தான் சரியானது  மற்றவர்களின் மத்ஹப்  தவறானது  என்று  கூறுகிறது (ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18) ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443) மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியாம். அந்த நான்கில் ஒன்றை பின்பற்றுவதுதான் சரியான வழியாம் என்ன குழப்பமான கொள்கை! மத்ஹப்வாதிகளின் கொள்கைப்படி இஸ்லாத்திற்கு ஒரே வேதம்; ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடியில் இருந்து பெருகிய மனித குலம். மனித குலத்திற்கு ஒரே இறுதித்தூதர். ஆனால் மத்ஹப் சட்டங்கள்  மட்டும் நான்கு. இந்த குழப்ப தத்துவத்தையே ஆலிம்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்.
    இந்த மத்ஹப் சட்டங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை விளக்க ஒரு சிறிய உதாரனத்தை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான் ”கடலில் வேட்டையாடுவதும், புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது (5:96)ஆனால் “பிக்ஹின் கலைக்களஞ்சியம்”  என்ற “ஹனபி மத்ஹப்பின் சட்ட விளக்கக் கடல்” என்ற  நூலில் நண்டு,  இரால் ஆகியவை ஹராம்” எனக் கூறப்பட்டுள்ளது.
    அல்லாஹ் படைத்த கடலில் வேட்டையாடும் மீன்கள் எல்லாம் ஹலால் ஆனால் ஹனபீ சட்ட விளக்கக் கடலில் உள்ள நண்டு இரால் போன்றவை ஹராமானது எப்படி? வேதமும் இறுதி வேதம், இறுதித் தூதர் வஹீ முற்று பெற்றபின் முகவரியற்ற பொய்ச் செய்தியைத் தருவது யார்?
    எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்  (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. (26:221,223)
    நீ எனக்கு கியாமல் நாள்வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத்தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62)
    அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று முதல் மனிதரில் ஆரம்பித்து இன்று முதல் இறுதிவரை மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பான். இந்த வலையில் மாட்டிய ஆலிம்கள் எழுதிய நூல்களில் எல்லாம் குர்ஆன் ஹதீஸிற்கு முரணானச் செய்திகளை அதிகம் காணலாம்.
     ஷைத்தான் முஸ்லிம்களை ஏகத்துவப் பாதையில் செல்ல விடாமல் தனது ஏஜண்டுகள் மூலம் முன்னால் வந்து ஹனபீ மத்ஹபைப் பின்பற்றச் சொல்கிறான். பின்னால் வந்து ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுவது தான் சரியானது என்கிறான். வலது பக்கம் மாலிக் மத்ஹப் மகத்தானது என்கிறான். இடது புறம் சென்று  ஹம்பலி மத்ஹபே கண்ணியமானது என்று கூறி முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறான். ஆகவே முஸ்லிம்களே! சிந்தியுங்கள். உங்களுக்கு நேர்வழியில்  செல்ல அல்லாஹ்  இறக்கிய சட்டம்  வேண்டுமா? வேண்டாமா? தேர்ந்தெடுங்கள் உங்கள் இறுதி முடிவை
அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும். நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக

1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.  ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15   ஈகாழுல் ஹிமம் பக்கம் 100

‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.
ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 68

2. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்
ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.  ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63   ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4
ஈகாழுல் ஹிமம் பக்கம் 62

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.  ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 145
3. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-
நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!
ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.
உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149.  ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.

நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை. ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227    ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.
4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.
என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!
ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.

ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்
 ஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள்

‘வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும்இ மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அழ்ழாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.’ (அல்குர்ஆன் 24.19)
மேலே நபிவழிக்கு முரணான மத்ஹபுச் சட்டங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அச்சட்டங்கள் அனைத்தும் நபிகளாரின் போதனைகளை அவமதிக்கும் வகையில் எவ்வித சரியான ஆதாரங்களுமின்றி முழுக்க முழுக்க மனிதக் கற்பனையில் தோன்றியவை என்பதையும் நபிகளாரின் போதனைகளுக்கு முற்றிலும் நேர் மாற்றமானவையாக அமைந்தவை என்பதையும் தெரிந்து கொண்டோம்.
இனி  மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள்ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.
இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.
MATHHAB-1ஒரு நாய் அல்லது பன்றி மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டுவிட்டன.  அக்குழந் தையை (தொடக்கூடாது இருப்பினும்) தொடுவது நிர்ப்பந்தமாக இருப்பதால் மன்னிப்பு உண்டு. அவன் மேல் ஈரம் இல்லாவிட்டால் பள்ளிக்கு வருவது கூடும். (நூல் பத்ஹுல் முயீன் ஷரஹுகுர்ரதுல் ஐன் பாகம்-1 பக்கம்-34)

எவ்வளவு மடமைத்தனமான விடயத்தைப் போதிக்கிறது இந்த ஷாபி மத்ஹபு நூல் பார்த்தீர்களா? இப்படி யாராவது சிந்திப் பார்களா? நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனையுடன் ஆபாசம் ஆரம்பமாகிறது. அப்படியென்றால் நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் நாயும் பன்றியும்தான் பெண்ணின் வயிற்றில் வளரும் என்று இந்நூலாசிரியர் சொல்ல வருகின்றாரா?
அதனால்தான் மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனை போட்டார் போலும். இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இதை அறிந்தால் இஸ்லாத்தைப் பற்றி எப்படி கணிப்பிட்டுக் கொள்வார்கள். மேலும் அக்குழந்தை அசுத்தம் என்று கூறி விட்டு தொழலாம் என்று கூறுவது எவ்வளவு மடமைத்தனம். சிந்தியுங்கள் இச்சட்டம் எவ்வளவு பைத்தியகாரத்தன மாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது விளங்கும். கிறுக்குத் தனமானதும் முட்டாள் தனமானதுமான மற்றுமொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
MATHHAB_2
உண்ணத்தக்க பிராணி இரண்டும் உடலுறவு கொண்டு மனித வடிவில் குழந்தை பெற்றால் அவன் தூய்மையான வனாவான். அவனை உண்ணலாம். இவன் குர்ஆனை மனனம் செய்து கதீபாக பணிபுரியலாம். நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை இவன் நடத்தலாம். தொழுகை முடிந்த பிறகு அவனையே குர்பானியும் கொடுக்கலாம். (நூல்: இஆனதுத் தாலிபீன்      பாகம்-1 பக்கம்-113)
ஆடும் ஆடும் சேர்ந்தால் ஆடுதானே பிறக்கும் மனிதன் பிறப்பானா? பிறக்கக் கூடும் என மத்ஹபு கூறுகிறது. ஒரு ஆடு மாட்டுடனோ அல்லது மாடு ஆட்டுடனோ சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்கலாம் என மத்ஹப் கூறுகிறது. இது நடைமுறைச்சாத்தியமா? அறிவியல் இதை நம்புமா? இஸ்லாம் இப்படிப்பட்ட உளறலை கூறியிருக்குமா? அறிவுடையோர் இதை ஒப்புக் கொள்வார்களா? சிந்தியுங்கள். மிருகமும் பெண்ணும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை அசுத்தமாம் மிருகமும் மிருகமும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை சுத்தமாம் வித்தியாசம் ஏதேனும் தெரிகிறதா? அறிவுள்ளவன் எவனாக இருந்தாலும் இச்சட்டத்தைப் பார்த்தால் கொதித்தெழவே செய்வான்.மனிதப் பண்புகளை வேரோடு தகர்த்தெறியும் இச்சட்டத்தை ஏற்க எந்த மனிதனாவது முன்வருவானா? மத்ஹப் வாதிகளே சிந்தியுங்கள்!
இச்சட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? இனியும் இந்த மத்ஹபு தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும்  மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

mathhab_3ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும். (நூல்: இஆனதுத் தாலிபீன்     பாகம்-4 பக்கம்-162)
எப்படி சிந்தித்துள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள் பார்த்தீர்களா? மிருகஜாதிக்கு மட்டுமே தோன்றக்கூடிய கற்பனைகளை மார்க்க சட்டங்கள் என்ற பேரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூட கேட்க முடியாத அளவுக்கு நா கூசுகின்ற அருவருக்கத் தக்க ஆபாசங்களை உள்ளடக்கியுள்ள இந்த மத்ஹபு நூற்களை என்ன செய்வது?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும்  மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்ட வயதினன் தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகிறான். அந்தச் சிறுமி ஒருநாள் குழந்தையாக இருப்பினும் அவ்வாறு நுழைந்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனை வழங்கப்படும். அதுபோல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை நுழைத்து விடுகிறாள். அந்த சிறுவன் ஒருநாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறு அவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்படும். (நூல் இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162) இச்சட்டங்களை எழுதுவதற்குக்கூட கை கூசுகிறது என்ன செய்வது மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு மத்ஹபுகளிலுள்ள அபத்தங்களை எடுத்துக் கூறியாவது அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பது எமது கடமை என்பதால் இவைகளைக் கூறுகின்றோம். மேற்கூறப்பட்ட ஆபாசச் சட்டங்கள் அனைத்தும் எமது நாட்டிலுள்ள அறபு மத்ரஸாக்களில் போதிக்கப்படும் ஷாபி மத்ஹபு நூற்களில் காணப்படுபவைகளாகும்.
இதைவிட மோசமாகவும் கேவலமாகவும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற அடிப்படையில்  ஹனபி மத்ஹபுக்காரர்கள் சிந்தித்திருப்பதை நாம் இப்போது சொல்லும் தகவலை வைத்து நீங்கள் புரிந்து கொள்லாம்.
ஒருவன் தனது ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டால் அல்லது தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் சரி நமது மத்ஹபின் படி (நோன்பு முறியாது) (நூல்: அத்துர்ருல் முக்தார் பாகம்-2 பக்கம்-439)
எப்படி கற்பனை பார்த்தீர்களா? இப்படியெல்லாம் ஒருவன் கற்பனை செய்வானா? எவ்வளவு ஆபாசமாக இம்மத்ஹபுச் சட்டம் உள்ளது. சிந்தியுங்கள் இனியும் மத்ஹபுப் பிடிவாதம் தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_4தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லின் பிரகாரம் பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் அல்லது ஒரு மிருகத்திடம் உடலுறவு கொள்வதால் வுழு நீங்க மாட்டாது. ஆண் குறியை மாத்திரம் கழுவி விட வேண்டும். (நூல்: அத்துர்ருல் முக்தார்: பாகம்-1இ பக்கம்-179)

இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? மத்ஹப்வாதிகள் கறபனை செய்தது போன்று கற்பனை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்த அல்குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை? அடுத்து இவர்கள் கூறும் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கு ஒத்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்.
பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது. வுழுவும் நீங்காது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_5 ஒருவர் தனது மறைவுறுப்பில் துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார். அப்போது உடலுறவின் இன்பத்தை அவர் அடைந்தால் குளிப்புக் கமையாகும். இல்லையெனில் குளிப்புக் கடமை இல்லை.
உறுப்பிலே துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் சாத்தியம் உண்டா? சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் உடலுறவு இன்பத்தை அடைந்தால் மட்டும் குளிப்புக் கடமை என்று கூறுவது சரியா? இந்த ஹதீஸை வாசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும்.
ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-291)
இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹதீஸ் தெளிவாக குளிப்பு கடமை என்று கூறியிருக்க மத்ஹப் கூறும் கற்பனைச் சட்டம் கூடாது என்கிறது எதை நாம் பின்பற்ற வேண்டும். தீய சிந்தனை கொண்டவர்களையும் வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் உருவாக்கிவிட முனையும் வகையில் ஆபாசத்தைத்தான் மதஹபுகள் போதிக்கின்றன என்பதை இனியாவது இந்த மத்ஹபு வாதிகள் சிந்தித்து மத்ஹபுகளை உதறித் தள்ளி விட்டு குர்ஆன்இ ஹதீஸின் பக்கம் வருவார்களா?
வேறு சில மத்ஹப் சட்டங்கள்   
 கணவன் காணாமல் போய் விட்டால் மனைவியின் கடமை என்ன?
மார்க்கம் என்ற பெயரில் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் ஹனபி மத்ஹப் சொல்வதைப்பாருங்கள்..!
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள். கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்கம் 220
குர் ஆன் சொல்லாத திருமண தடை !
இச்சையுடன் ஒரு பெண் ஒரு ஆனை தொட்டால், தொட்டவளின் தாயும் மகளும் இவனுக்கு (திருமணம் செய்ய தடை, அவள் தொட்டது , அவனது தலை முடியாக இருந்தாலும் சரியே! (துர்ருல் முக்தர் பக்கம் 32 )

ரசூல் சொல்லாத சட்டம்
மாதத்தின் முதல் நாள் இரவிலும், கடைசி இரவிலும் நாடு இரவிலும் உறவு கொள்வது வெறுப்புக்குரியதாகும். ஏனெனில், இன்னாட்ட்களில், ஷைத்தான் விஜயம் செய்கிறான். (ஈ யானா பக்கம் 273 )
தொழுகைக்கு கொடுக்கப்படும் "மேன்மை"
அஹஹஹா என்று வெடிச்சிரிப்பு சிரிப்பது, வேண்டுமென்றே காற்று விடுவது, அல்லது பேசுவது போன்ற செயல்களை செய்த்து தொழுகையை விட்டு வெளியேறி விடலாம். (ஷாஹியா இப்னு ஆபிதீன் பக்கம் 448 )

நாய் அல்லது பூனையை இச்சு கொட்டி அன்புடன் அழைத்தாலோ, அல்லது கழுதையை விரட்டினாலோ, தொழுகை வீணாகாது! காரணம், இது எழுத்து வடிவிலான வார்த்தை அல்ல!  (துர்ருல் முக்தார் பக்கம் 614 )

தவ்ராதையோ, இன்ஜீலையோ தொழுகையில் ஓதலாம். ஆனால், அது அல்லாஹ்வை நினைவுப்படுதுபவையாக இருக்க வேண்டும், சரித்திரங்களாக இருந்தால் தொழுகை கெட்டுப்போய் விடும்.(துர்ருல் முக்தர் பக்கம் 485 )

"குர் ஆனின் தாயை" கேவலப்படுத்தும் சட்டம்!
மூக்கு உடைந்து விட்டால், தன்னுடைய நெற்றியில் இரததைக்கொண்டு பாத்திஹா சூராவை குணமாவதற்காக எழுதலாம் மூத்திரத்தில் (பாதிஹாவை) எழுதினாலும் தப்பில்லை! (சாகிய இப்னு ஆபிதீன் பக்கம் 210 )
விபச்சாரத்தில்தப்பிக்க..
தன்னுடன் (விபச்சாரத்தினால் பிடிபட்ட) அந்த பெண் அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரி, அவளை தான் மனைவி என்று வாதிட்டால் தண்டனை கிடையாது! (ஷாஹியா இப்னு ஆபிதீன் பக்கம் 29 )
 தொழுகையா? விளையாட்டா?
நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகிறது. அவர் அதே நிய்யத்தில் லி நோக்கத்தில் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்றே கூற வேண்டும். ஆனால் தங்கக் காசை அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை. துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 223
தொழுகையில் பைபிள் ஓதலாமாம்!
தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினால் அல்லது தவ்ராத் இஞ்சீலை (பைபிளை) ஓதினால் அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும். போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.
(துர்ருல் முக்தர், பாகம் 1, பக்கம் 359)
குழந்தைகளைத் திருடலாம்.
நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும்திருடிச் சென்றால் அவனது கைகளைத் துண்டிக்கக் கூடாது.(ஹிதாயா பாகம் 1, பக்கம் 540)
இப்படியும் திருடலாம்
ஒருவன் மற்றவரின் வீட்டில் துவாரமிட்டு அதன்வழியாக எதையேனும் எடுத்தால் அவனது கையைத் துண்டிக்கக் கூடாது.(ஹிதாயா பாகம் 1, பக்கம் 546)
விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு
விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.  கன்ஸுத்தகாயிக், பாகம்லி1, பக்.184
காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்து விட்டால் அதற்குத் தண்டனை இல்லை
 விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்
ஒரு முஸ்லி ம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக் குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹ னீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும். (ஹிதாயா பாகம் 2, பக்கம் 41)
கற்பனைக் கதைகள்
அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார். இவ்வாறு நாற்பது வருடங்கள் லி (அதாவது 15 ஆயிரம் நாட்கள்) லி தொழுதிருக்கின்றார். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.   துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38

அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து லி இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது கா ன் மீது வைத்துக் கொண்டு, வலது கா ல் நின்றார். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார். பின்னர் ருகூவு செய்து ஸஜ்தா செய்தார். பின்னர் வலது காலை இடது கா ன் மீது வைத்துக் கொண்டு இடது கா ல் நின்றார். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.
என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளான். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.
உடனே கஅபாவின் மூலையி ருந்து, ”அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும் கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்” என்று ஓர் அசரீரி கேட்டது.
துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 39
கோமாளிக் கூத்து
ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இதுக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.   (துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51)
செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்
தாமாகச் செத்தவை ஹராம் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. அவை முழுமையாக ஹராம் என்பதில் சந்தேகமில்லை. தோலை மாத்திரம் பாடம் செய்து பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் மத்ஹபு என்ன கூறுகின்றது?
செத்த பிராணிகளின் முடியும் அதன் எலும்பும் தூய்மையானவை.
ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா பாகம் 1, பக்கம் 41

செத்த ஆட்டின் எலும்பை சூப் போட்டு குடிக்கச் சொல்கிறார்களா? இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? ஷரீஅத் பேரவை விளக்கட்டும்.
மூத்திர வைத்தியம்
ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை. (துர்ருல் முக்தார் லி பாகம் 1, பக்கம் 154)

தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப் படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப் படுவது போல்இதற்கும் அனுமதியளிக்கப் படும். இதுதான் பத்வா! (அதே நூல், அதே பக்கம்)
  கசையடிக்கு விசித்திரமான விளக்கம்
ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடும்.
அடுத்தவன் குழந்தை
ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும். (மஙானி பக்கம் 507)
இமாமின் தகுதிகள்:
அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்
அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார்)
இந்தியாவில் ஜும்ஆ
மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது.
ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168
பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.  (அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)
ஊரை அடித்து உலையில் போடலாம்
பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)
ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது, அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார். ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது,
விசித்திரமான ஆராய்ச்சி
ஹனபி மத்ஹபின் இமாம்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முஹம்மத் இமாமுடைய கருத்துப்படி யானை, பன்றியைப் போல் முழு நஜீஸாகும். இந்த விசித்திரமான சட்டம் ஹிதாயா பாகம் 2, பக்கம் 39ல் காணப்படுகிறது. இதற்கு என்ன ஆதாரம் என்பதை ஷரீஅத் பேரவை விளக்குமா?
******************************************************************************
“ நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும்,  இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன் 4:59)  
மேலே மத்ஹப்வாதிகள் தமது மத்ஹபுக் கருத்துக்களை நியாயப்படுத்த மத்ஹபுகளின் பெயரால் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறியுள்ளனர் என்ற விளக்கத்தைப் பார்த்தோம்.  இனி ஹதீஸ்களுக்கு நேர் மாற்றமாக அமைந்துள்ள   மத்ஹபுச் சட்டங்கள் சிலவற்றை நோக்குவோம். 
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாக  அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் அமைந்திருக்கின்றது. இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விரண்டின் அடிப்படையிலும் தமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
மத்ஹபு நூற்களைப் பொறுத்த மட்டில் அவற்றில் அல்குர்ஆனுக்கு மாற்றமான சட்டங்கள் காணப்படுவது போல் நபிவழிக்கு நேர் முரணான சட்டங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
01. ஒருவரோ அல்லது பலரோ பள்ளிவாயலுக்கு கூட்டுத்தொழுகைக்காக வந்து இமாமை எந்த நிலையில் கூட்டுத்தொழுகையில் காண்கின்றார்களோ, அவர்கள் அந்த இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.
இதுதான் நபிவழியும் இஸ்லாத்தின் சட்டமுமாகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
‘(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்) தைத் தொழுங்கள், உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-636)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
‘இமாம் கடைசி ரக்அத்தின் ருகூவை முடித்ததன் பின் பள்ளிவாயலுக்கு வரும் கூட்டத்தினர் இமாம் சலாம் கொடுக்கும் வரை (தொழுகையில்) சேராமல் பொறுமையாக இருந்து அவர் சலாம் கொடுத்த பின்பு தனி ஜமாத்தாக தொழ வேண்டும். இதுதான் ஸுன்னத்தாகும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-06ல் கூறப்பட்டுள்ளது)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன் 4:59)
02. திருமறை குர்ஆனை ஓதுவது இஸ்லாத்தில் வணக்கமாகக் கருதப்படும் ஓர் அம்சமாகும். ஒருவர் திருக்குர்ஆனை மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதி முடிப்பதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஒரு குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் தடை விதித்தார்கள். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். முடிவில், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!  என்று கூறினார்கள்.
மேலும் ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்றார்கள். இதைவிட அதிகமாக (ஓத) எனக்கு சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில் மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1978)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமழானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தொழுகையிலேயே ஓதி முடிக்க வேண்டும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-01 பக்கம்-16ல் கூறப்பட்டுள்ளது.)
ஒரு நாளைக்கு இருதடவை குர்ஆனை ஓதிமுடிப்பது சாத்தியமா? என்பது ஒருபுறம் இருக்க, இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
03. ஜும்ஆத் தொழுகையின் நேரம் தொடர்பாக இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது. ஜும்ஆவுக்கு இரண்டு நேரங்கள் உள்ளன. ஒன்று ழுஹர் நேரம் மற்றது முற்பகல் நேரம் இதுபற்றி பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
‘நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம் என்று சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள். நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரிச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி (அங்கு பயிராகும்) தண்டுக் கீரையின் தண்டுகளைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது வாற்கோதுமையை அரைத்து அதில் இடுவார்.
நாங்கள் ஜுமுஆத் தொழுதுவிட்டு திரும்பி வந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள் முன் வைப்பார். அதன் காரணத்தினால் நாங்கள் (வெள்ளிக்கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பிறகுதான் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம், காலை உணவையும் உட்கொள்வோம்.’ (அறிவிப்பவர்: அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6248)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
ஜும்ஆத் தொழுகை நிறைவேறுவதற்கு முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அது ழுஹர் நேரத்தில் தொழப்பட வேண்டும் என்பது. அதற்கு முன் தொழப்பட்டால் அந்த ஜும்ஆ செல்லத்தக்கதல்ல.
(இக்கருத்து ஷாபி மத்ஹபின்; பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-62ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)

04. போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குறைவாகப் பாவித்தாலும், கூடுதலாகப் பாவித்தாலும் போதை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஹராமேயாகும்.
போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. ‘அழ்ழாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்த இடமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப் படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது. (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரி (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-6124)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
கொஞ்சம் (போதைப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னவெனில் அது அறிவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அது போதையூட்டக் கூடியதாக இருப்பினும் சரியே. அதிகம் என்பதன் கருத்து அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
எனவே, இது மக்ரூஹ் (வெறுக்கத் தக்கது) என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால், இதைக் கண்டிப்பாகப் பொது மக்களிடம் மறைத்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள். (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-4 பக்கம்-156ல் கூறப்பட்டுள்ளது)
05. இஸ்லாத்தில் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன் முஸ்லிம்களிடத்தில் மகத்துவமிக்க வேதமாகும். அதை  ஓதுவதையும் அதன்படி நடப்பதையும் இஸ்லாம் வணக்கமாகக் கருதுகிறது. ஏனெனில் அது இறைவனின் வார்த்தையும் வழிகாட்டலுமாகும். திருக்குர்ஆனில் ஸுரத்துல் பாத்திஹாவுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
‘நான்(பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுதுமுடித்த பிறகு) அழ்ழாஹ்வின் தூதரே நான் தொழுதுகொண்டிருந்தேன்.
(அதனால்தான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்க வில்லை) என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘அழ்ழாஹ்’ (இறை நம்பிக்கையாளர்களே) அழ்ழாஹ்வும் (அவனுடைய தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள் என்று 8:24ஆவது வசனத்தில்) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.
பிறகு நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டாமா? என்று வினவியபடி எனது கையைப் பிடித்தார்கள்.
நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து)வெளியேற முனைந்த போது நான் (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) அழ்ழாஹ்வின் தூதரே தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்திய தோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா? என்று கேட்டீர்களே! என்று வினவினேன்.
நபி (ஸல்) அவர்கள் (அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்பாத்திஹா அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும் என்று சொன்னார்கள்.’(அறிவிப்பவர்: அபூசயீத் பின் முஅல்லா (ரழி), நூல்: ஸஹீஹுல் புகாரி-5006)
ஆனால், குர்ஆனை அவமதிக்கும் வகையில் குறிப்பாக ஸூரத்துல் பாத்திஹாவை அவமதிக்கும் வகையில் ஹனபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
சின்னி மூக்கு உடைந்து விட்டால் தன்னுடைய நெற்றியிலும் மூக்கிலும் இரத்தத்தைக் கொண்டு ஸூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தை எழுதிக் குணமாகும் எனில் அவ்வாறு குணமாவதற்காக எழுதுவது கூடும்.
சிறுநீரில் எழுதினால் குணம் கிடைக்கும் என்றால் பாத்திஹா அத்தியாயத்தை சிறுநீரில் எழுதுவதும் குற்றமில்லை. (இக்கருத்து ஹனபி மத்ஹபின்; ஹாஷியது இப்னு ஆபிதீன் எனும் நூலில் பாகம்-1, பக்கம்-210ல் கூறப்பட்டுள்ளது)
குர்ஆனிலேயே சிறந்த மகத்துவமிக்க அத்தியாயமென்றும் அல்குர்ஆனின் தாயென்றும் போற்றப்படும் அல்ஹம்து அத்தியாயத்தை எந்த அளவு மதித்துள்ளார்கள் பாத்தீர்களா! அழ்ழாஹ்வின் வேதத்தை சிறுநீரில் எழுதச்சொல்லி அல்குர்ஆனை அவமதிக்கும் இந்த மத்ஹபை தூக்கிப் பிடிப்பது அவசியம்தானா? மத்ஹப் வாதிகள் சிந்திக்கட்டும்.
06. இஸ்லாம் தாம்பத்திய உறவின் மூலம் உடலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கூறுகிறது. ஒருவன் தனது ஆசையை  மணைவியிடத்தில் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
திருமறை குர்ஆனில் 2:222ம் வசனத்தில் மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குறியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொல்லும் போது ஷைத்தான் விஜயம் செய்கிறான். என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது. (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-3 பக்கம்-273ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
இவ்வாறாக நேரடியாகவே நபிவழிக்கு முரண்படக்கூடிய மத்ஹபுச் சட்டங்களை இன்னும் நாம் பின்பற்ற வேண்டுமா? 
மத்ஹபு நூற்களில் காணப்படும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் தொடர்பாக நோக்குவோம்.

இஸ்லாமிய வரலாற்றில் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பல பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளில் முக்கியமாக அரசியல் ரீதியாகத் தோன்றிய பிரிவினறையும்,மத்ஹபுகள் ரீதியாக தோன்றிய பிரிவினரும் குறிப்பிடலாம். இந்தப்பிரிவினர் ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாத போது தங்கள் கொள்கையை வலுப்படுத்த பல ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூற ஆரம்பித்தனர்.

நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்’ என்ற ஹதீஸைப் புறக்கனித்து விட்டு தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி, ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி  அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.
”என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார், அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்” என்று நபி  அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (நூல்: தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஸாபி மத்ஹபினருக்கு எதிராக இட்டுக்கட்டினர்
என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் தாபித், அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹவுடைய மார்க்கத்தையும், என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தமது ஹனபி மத்ஹபுக்கு சார்பாக ஒரு பொய்யைத் துணிந்து கூறியுள்ளனர்.
சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி  அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக பல பலயீனமான ஹதீஸ்களைக் கூறியுள்ளனர். அவற்றுல் சிலதை இங்கே குறிப்பிடுகினறேன்.
பிலால் (ரலி) அவர்கள் (தொழுகைக்காக), இகாமத் சொல்லும் போது قد قامت الصلاة என்று கூறிய வேளையில் நபியவர்கள் أقامها الله وأدامها அகாமஹல்லாஹு வஅதாமஹா என்று கூறினார்கள்.,து ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விடயத்தை ஸாபி மத்ஹபின் பிரபல்யமான , மாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல்மஜ்மூஃ பாகம்3 பக்கம்126)
ஒரு பள்ளிவாயளுக்கு அருகாமையில் ,இருப்பவர் அப்பள்ளிவாயளில்தான் தொழவேண்டும். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விடயத்தை ஸாபி மத்ஹபின் பிரபல்யமான ,மாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல் மஜ்மூஃபாகம்4 பக்கம்191)
முடியையும், ரத்தத்தையும், நகங்களையும் புதையுங்கள் ஏனனில் நிச்சயமாக அவைகள் இறந்தவையாகும் என நபியவர்கள் கூறினார்கள். இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் இமாம் பைஹகி அவர்கள் இது சம்பந்தமாக வரும் அனைத்து அறிவிப்புக்களும் ஆதாரமற்றவையாகும்.எனக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். (நஸ்புர் ராயஹ் பாகம்1 பக்கம்417)
தொழுகையில் நபிவழி தக்பீர் கட்டும்போது வலது கையை இடது கையின் மீதுவைத்து தொப்புளுக்கு கீழே வைப்பதாகும். இமாம் நவவியவர்கள் தமது நூலான ஸரஹு முஸ்லிமில் இந்த செய்தி பலயீனம் என்பது ஏகோபிக்கப்பட்டது எனவும் இமாம் பைஹகி அவர்கள் தமது    மஃரிபா எனும் நூலில் இந்த செய்தி ஆதாரமற்றது  எனவும்  குறிப்பிடுவதாக இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் கூறுகிறார்கள். (நஸ்புர் ராயஹ் பாகம்2 பக்கம்199)(ஸரஹு முஸ்லிம் பாகம்2 பக்கம்138)
பள்ளிவாயளில் பேசுவது ஒரு மிருகம் புள்ளை சாப்பிடுவது போன்று நன்மைகளை அழித்துவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரமற்ற செய்தியன்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.(தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்410)
நபியவர்கள் தக்பீர் சொன்னால் தமது இருகைகளையும் கீழே விடுவார்கள்.ஓத நாடினால்  வளது  கையை இடது கையின்மீது வைப்பார்கள். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்417)
உங்களில் ஒருவர் மரணித்தால் அவரின் மீது மண்ணை போட்டு கப்ரை சீராக்கிவிட்டு உங்களில் ஒருவர் கப்ரின் தலை மாட்டில் நின்று இன்னாளுடைய மகன் இன்னானே என்று தல்கீன் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்9 பக்கம்408)(அல் மஜ்மூஃபாகம்5 பக்கம்304)
மேற்குறித்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றதாக இருந்தும் ஸாபி மத்ஹபினர் இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் உட்பட ஆதாரமற்றவைகள் என்று கூறியும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர். வல்ல இறைவன் வறட்டுப் பிடிவாதத்தை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக.
இன்னும் சிலர் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்தும்  கூறியுள்ளனர்.
”யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை” என்று நபி  அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் ஹனபி மத்ஹப் சட்டம். நூல்: அஸ்ஸுன்னத் வமாகானதுஹா
தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.
”காஃபத்துல்லாஹவில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்” என்று நபி  அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். நூல்: (தன்ஷி{ஹஷ்ஷரீயத்)
இவ்வாறு மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.
சுன்னத் (?) ஜமாத்தின் இன்றைய கொள்கைக்கு எதிராக கருத்து சொல்லும் மத்ஹப்கள் !!
தர்ஹா கட்டுவது கூடாது!
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.  (ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்! கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காக செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்  (ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )
 அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் !
அல்லாஹ் உண்மையாக அர்ஷில் அமர்ந்தான் என்பதை நல்லவர்களான முன்னோர்களில் (ஸஹாபாக்கள்) யாரும் மறுக்கவில்லை. இதன் மூலம் அர்ஷ் என்பது அல்லாஹ்வினுடைய படைப்புகளில் மிகப் பிரம்மாண்டமானது என்பது குறிப்பாகிறது. அவர்கள் (அல்லாஹ் எவ்விதத்தில்) அமர்ந்திருக்கிறான் என்பதை அறியவில்லை. ஏனெனில் அதனுடைய உண்மையான விதம் (குர்ஆனிலும், ஹதீஸிலும்) அறியப்படவில்லை. மா­க் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ” (அல்லாஹ் அர்ஷில்) அமர்ந்தான் என்பது அறியப்பட்டதாகும். எவ்விதத்தில் என்பது அறியப்படாததாகும். விதத்தை பற்றி கேட்பது ”பித்அத்” ஆகும்.
(நூல் : தப்ஸீர் குர்துபி 7: 54 வசனத்தின் விரிவுரை)
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு !
அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்ற கருத்து அல்குர்ஆன் 75 : 22, 23 மற்றும் புகாரி 7439, 4581 மற்றும் பல ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவனது தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். இவ்வுலகில் யாரும் அவனுக்கு தோற்றம் கற்பிக்கக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் ”அவனைப் போல் எதுவும் இல்லை.” ”அவனுக்கு நிகராக யாருமில்லை”. இதுதான் உண்மையான இஸ்லாமியக் கொள்கையாகும். இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
அல்லாஹ்விற்கு கையும், முகமும், ஆன்மாவும் உள்ளது. தனக்கு முகம், கை, ஆன்மா இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது, (எப்படி என்று விளக்க முடியாகத வகையில்) விதமில்லாமல் அவனக்குரிய வர்ணைகளாகும். ” அல்லாஹ்வுடைய கை” என்பதற்கு ”அவனுடைய வல்லமை”. ”அவனுடைய அருள்” என்று கூறுவது கூடாது. ஏனெனில் இவ்வாறு விளக்கம் கொடுப்பது அவனுடைய வர்ணனைகளை அர்த்தமற்றதாக்குவதாகும். மேலும் இது கத்ரிய்யாக்கள், மற்றும் முஃதஸிலாக்களுடைய கூற்றாகும் என்று இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹனபி மத்ஹப் நூல் : ஷரஹ் ஃபிக்ஹ‎ýல் அக்பர் பக்கம் : 43, 44, 45)

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்! நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)

இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்! மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.    (நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர­) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)

நன்றி : hakkem.blogspot.com
               www.thaikkal.com
               unnmaygal.blogspot.com

"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்



"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது, தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள், ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும், பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும், தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும், அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு, அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில், அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!


இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன
குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்து மதவெறிப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த பிப்ரவரி 27, 2012 அன்று அப்படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு முசுலீம் அமைப்புகளும், ஜனநாயக  மனித உரிமை இயக்கங்களும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  அதே பத்தாண்டுகளுக்கு முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி, 59 பேர் இறந்துபோன வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கும்பொழுது,  இந்து மதவெறிப் படுகொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நீதிமன்றத்தை எட்டியிருக்கும் இப்படுகொலை வழக்குகளுள் பத்துபதினைந்து வழக்குகளில் மட்டும்தான் விசாரணை முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இப்படுகொலை வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்தி லேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர்.  உள்ளூர் அளவில் இப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல், மாயா கோத்நானி உள்ளிட்ட பலரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.  இவை அனைத்திற்கும் மேலாக,  இந்து மதவெறி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராக, தொடுத்த வழக்கில், மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
இப்படுகொலையை நடத்திய இந்து மதவெறிக் கும்பலே கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை ஆண்டு வருவதும்; குஜராத் போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அம்மாநில அரசு நிர்வாக இயந்திரம் முழுவதும் காவிமயமாக்கப்பட்டிருப்பதும், மோடியின் கைக்கூலிகளால் நிரப்பப்பட்டிருப்பதும்; இன்னொருபுறம் இப்படுகொலை தொடர்பான சில வழக்குகளில் தலையிட்டு விசாரணை நடத்தி வரும் குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு போன்ற அமைப்புகள் பல்வேறு சமயங்களில் இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்துகொண்டு வருவதும் முசுலீம்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்குக் காரணங்களாக உள்ளன.  சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை  இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.  இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

குஜராத் போலீசு:     

குஜராத்-படுகொலைநரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.  அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.
இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடியபொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை’’த் தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.  விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி, ரமேஷ் தாவே, அனில் படேல் ஆகியோர் இந்த உண்மைகளை வாக்குமூலமாக தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதானிடம் ஆரவாரத்தோடு கூறியுள்ளனர்.
இப்படுகொலையில் போலீசுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால், 2,107 வழக்குகள் போலீசு நிலையத்திலேயே மங்களம் பாடி புதைக்கப்பட்டன.  இப்படி விசாரணையின்றி மூடப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகளை மீண்டும் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், குஜராத் போலீசு வெறும் 117 வழக்குகளில் மட்டும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இப்படுகொலை தொடர்பாக 38 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.
மதவெறிப் படுகொலையின்பொழுது, இந்து மதவெறிக் குண்டர்களோடு கைகோர்த்துக் கொண்ட போலீசாருக்குப் பிற்பாடு பதவி உயர்வு அளிக்கப்பட்டது;  கொலைகாரக் கும்ப லைக் கைது செய்யத் துணிந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இதனை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “இது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்; இதில் மோடி அரசிற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது” எனக் கூறியது.

நானாவதி  ஷா கமிசன்: 

இக்கமிசனின் நீதிபதிகளுள் ஒருவரான ஷாவை, “எங்க ஆளு” என்றும், மற்றொரு நீதிபதியான நானாவதியை, “பணத்துக்காகத்தான் அவர் கமிசனில் சேர்ந்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டு, குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.  அக்கமிசனின் விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.
நீதிபதி நானாவதி, தான் கமிசனில் சேர்ந்தவுடனேயே, “கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசு எடுத்த நடவடிக்கைகளில் எந்தக் குற்றங்குறையும் காணமுடியவில்லை” எனப் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார்.  “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் எரிக்கப்பட்டது மிகப் பெரிய சதிச்செயல்” என மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கும் கமிசன், மதவெறிப் படுகொலைகள் பற்றிய விசாரணையை இழுத்தடிக்கும் வேலையைத்தான் கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவருகிறது.  குறிப்பாக, படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த இடங்களில் இருந்த சங்கப் பரிவார அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீசுஅதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அடங்கிய ஒலித்தகடை, கமிசன் இன்றுவரை ஆய்வு செய்யவே மறுத்து வருகிறது.
நீதிபதி ஷா மார்ச், 2008இல் இறந்த பிறகு, அவர் இடத்திற்கு அக்சய் மேத்தா என்ற நீதிபதியை மோடி அரசு நியமித்தது.  நீதிபதி அக்சய் மேத்தா நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் என்ற இரு இடங்களில் நடந்த படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியைப் பிணையில் வெளியே அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழமை நீதித்துறை:

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத் பொதுச் செயலர் திலீப் திரிவேதி, விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவரான பாரத் பட், பாஞ்ச்மஹால் மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவர் பியுஷ் காந்தி என இவர்களைப் போன்ற சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து மதவெறிக் குண்டர்களுக்கு விரைவாகப் பிணை கிடைக்க ஏற்பாடு செய்வது; சாட்சிகளை மிரட்டுவது, கலைப்பது அல்லது சாட்சிகளிடம் பேரம் நடத்தி வழக்கையே நீர்த்துப் போகச் செய்வது போன்ற சட்டவிரோத வேலைகளைத்தான் இந்தக் கும்பல் அரசு வழக்குரைஞர் என்ற போர்வையில் செய்து வருகிறது.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டவிரோதச் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, அந்நீதிமன்றங்கள் மோடியின் இன்னொரு மூளையாகத்தான் செயல்பட்டு வருகின்றன.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதை பெஸ்ட் பேக்கரி வழக்கு நாடெங்கும் அம்பலப்படுத்தியது.
நானாவதி  ஷா கமிசனின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்டியா, “ஒவ்வொரு நீதிபதியும் தொலைவில் இருந்துகொண்டே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் … ஏனென்றால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள்” என நீதிபதிகளின் இந்து மனோபாவத்தை வெளிப்படையாகவே புட்டு வைத்தார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு:

குஜராத்-படுகொலை-1
பெட்டிச் செய்தி -1
நரேந்திர மோடியைக் குற்றவாளியாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரிய வழக்கு ஆகியவற்றில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.  குஜராத் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கான சான்றுகளாகத்தான் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புகளைப் பார்க்க முடியும்.
குஜராத்தில் நடந்த மதவெறிப் படுகொலை தொடர்பான 9 முக்கிய வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தாலும், இவ்வழக்குகளின் முடிவுகள் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியை வழங்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  நீதிபதிகள் வழக்கு விசாரணையின்பொழுது அடிக்கும் சவடால்களும் இறுதியில் அவர்கள் எழுதும் தீர்ப்புகளும் நேருக்கு மாறாக இருப்பதைப் பல வழக்குகளில் காணமுடியும்.
குஜராத்-படுகொலை-2
பெட்டிச் செய்தி - 2
அந்த 9 வழக்குகளுள் ஒன்றான சர்தார்புரா வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், சதிக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுள் ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையான வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பில்,  சிறப்பு நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய நான்கும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளன.
‘‘முசுலீம்கள் அனைவரும் அடிப்படைவாதிகள்” என இந்து மதவெறி விஷத்தைக் கக்கிவரும் நோயல் பார்மர் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியைத்தான் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக முதலில் நியமித்தது.  மனித உரிமை அமைப்புகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களும் பார்மரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, பார்மரின் வலது கையான ரமேஷ் படேல் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  பிறகெப்படி இவ்வழக்கு விசாரணை நடுநிலையாக நடந்திருக்க முடியும்?  இந்த இரண்டு நியமனங்களையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது அமைத்த பானர்ஜி கமிசன், “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானது சதிச் செயல் அல்ல’’எனத் தீர்ப்பளித்தது.  இந்த அறிக்கையைத் தடை செய்ததோடு, அதனைச் சட்ட விரோதமானது என்றும் கூறி 2005  இல் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம்.  அத்தீர்ப்பைத் தடைசெய்ய முடியாது என 2006  இல் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.  சிறப்பு நீதிமன்றம் சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானதைப் பயங்கரவாதிகளின் சதிச்செயல் எனத் தீர்ப்பளித்து, முசுலீம்களுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கியிருப்பதை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
நரேந்திர மோடி உள்ளிட்டு 63 பேருக்கு எதிராக ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில், மோடியை விடுவிக்கும் உள்நோக்கத்துடன்தான் தனது விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திவந்தது. “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என இந்த உள்நோக்கம் பற்றி பட்டும் படாமல் கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நண்பனாக ராஜூ ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைககளை ஆய்வு செய்து, தனியாக அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.  எனினும், மோடி மீது குற்றச்சாட்டினைப் பதிவு செய்ய வேண்டிய தருணத்தில், அந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள, சட்டத்தின் வரம்பினைக் காட்டி, இது பற்றி முடிவெடுப்பதை அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றம்.  மேலும், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கை இனி கண்காணிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தது.
ஜாகியா ஜாஃப்ரி இந்த வழக்கில், மோடி மீது 32 குறிப்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு கூறியிருந்தார்.  இந்த 32 குற்றச்சாட்டுகளுள், சபர்மதி விரைவு வண்டியின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையான அன்றிரவு நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள் என  உத்தரவிட்டார்” என்ற குற்றச்சாட்டு மிக முக்கியமானதாகும்.  ஜாகியா ஜாஃப்ரி, தனது இக்குற்றச்சாட்டுக்குச் சாட்சியமாக, படுகொலை நடந்தபொழுது குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட்டைக் குறிப்பிட்டிருந்தார்.  மோடி நடத்திய இக்கூட்டத்தை, “மிகப் பெரிய சதியின் தொடக்கம்” எனக் குறிப்பிட்டு வரும் சஞ்சீவ் பட்,  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராகி, தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான ஆதாரங்களைத் தந்து, இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார்.
குஜராத்-படுகொலைசிறப்புப் புலனாய்வுக் குழு தற்பொழுது அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் அளித்துள்ள அறிக்கையில் சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறுவதை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறது.  இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக கசிந்து வெளிவந்துவிட்டன.
மோடி நடத்திய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்ளிட்டு எட்டு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  அந்தக் கூட்டத்தில் பட் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு மற்ற ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் நினைவில்லை எனப் பதில் அளித்துள்ளனர்; மூன்று பேர் “வரும், ஆனா வராது” என்ற பாணியில் தெளிவில்லாத பதிலை அளித்துள்ளனர்.  ஒரேயொரு அதிகாரி மட்டும்தான் பட் கலந்து கொள்ளவில்லை எனப் பதில் அளித்தார்.  இந்த ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவர்கள் தமது பதவி ஓய்விற்குப் பின்பு மோடியின் தயவால் பசையான பதவியில் அமர்ந்துள்ளனர்.  ஒருபுறம் இந்த ஏழு அதிகாரிகளையும் நம்பமுடியாத சாட்சியங்கள் எனக் குறிப்பிடும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இன்னொருபுறம் சஞ்சீவ் பட் விவகாரத்தில் இந்த நம்ப முடியாத ஏழு அதிகாரிகளின் சாட்சியங்களைக் கொண்டு, சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முரண்பாடான முடிவை அறிவித்திருக்கிறது; சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் வேறு சாட்சியங்களை விசாரிக்கவும் மறுத்துவிட்டது.(பார்க்க பெட்டிச் செய்தி)

குஜராத்-படுகொலைஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன் அளித்திருக்கும் அறிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலிருந்து ஓரளவிற்கு வேறுபட்டிருக்கிற உண்மையும் ஊடகங்கள் வாயிலாகக் கசிந்து வெளிவந்துவிட்டது.  குறிப்பாக, அவரது அறிக்கை மோடி நடத்திய கூட்டத்தில் பட் கலந்து கொண்டிருக்கக்கூடும் என்பதற்குப் பல்வேறு சந்தர்ப்ப சாட்சியங்களை முன்வைத்துள்ளது. மேலும், சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நீதிமன்றத்தின் முன் வைத்து, அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.
‘‘நரேந்திர மோடிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லை; இப்படுகொலை தொடர்பாகச் சில சில்லறைத் தவறுகள் நடந்திருக்கலாமேயொழிய, மோடிக்குக் கிரிமினல் உள்நோக்கம் எதுவுமில்லை; அந்தத் தவறுகளும்கூட மோடி மீது குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுக்கும் அளவிற்கு வலுவானவையல்ல” எனக் கூறி, மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.
குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளாக முசுலீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.  இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்; அவர்களுக்கு உரிய நட்ட ஈடுகூட வழங்காமல் வக்கிரமாக நடந்துவருகிறது, மோடி அரசு.  இப்படிபட்ட நிலையில், மோடிக்கு இந்த இனப்படுகொலை தொடர்பாக எந்தவிதமான கிரிமினல் உள்நோக்கமும் கிடையாது என்ற முடிவை அறிவிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு துணிகிறதென்றால், இதிலிருந்தே இந்தக் குழு காவிச் சிந்தனையில் ஊறிப் போன நயவஞ்சகக் கும்பல் என்பதை நாம் புரிந்துகொண்டுவிடலாம்.  இந்த அறிக்கை மோடியைப் பிரதமராக்கிவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் வக்கிரத்தை விசிறிவிடத்தான் பயன்படுகிறது.
அதே சமயம், ஊடகங்களால் பெருத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையோ, இம்மதவெறி படுகொலை தொடர்பான சதித் திட்டத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்துப் பேசாமல், இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே பகைமையைத் தூண்டிவிடுதல், சட்டத்தை மதிக்காது அரசு ஊழியர் நடத்தல் போன்ற இரண்டாம்பட்சமான குற்றச்சாட்டுகளைத்தான் மோடி மீது சுமத்தியிருக்கிறது.  அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் ஒருவேளை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு, ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், இவ்வழக்கு விசாரணையின் முடிவில், ஒருவேளை நரேந்திர மோடிக்கு  மூன்று ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.
குஜராத்-படுகொலைஇட்லர் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இணையான, ராசபக்சே நடத்திய ஈழத்தமிழர் படுகொலைக்கு இணையான குற்றங்களைச் செய்திருக்கும் மோடியின் மீது, குஜராத்தில் பல போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கும் மோடியின் மீது வெறும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளைத்தான் பதிவு செய்ய முடியும் என்றால், இதைவிடக் கேலிக்கூத்தும் கையாலாகத்தனமும் வேறெதுவும் இருக்க முடியாது.
மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு என நீட்டி முழங்கும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும் இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்க முன்வரவில்லை.  இது மட்டுமல்ல; காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகளில் ஒன்றுகூட,  கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.  மோடி தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்வைக்கும் இந்து மதவெறியும் குஜராத் பெருமையும் கலந்த அரசியலை எதிர்கொள்ளத் திராணியற்று, இந்த ஓட்டுக்கட்சிகள் ஒடுங்கிக் கிடந்தனர் என்பதே உண்மை.  “மோடியைக் கொல்ல முசுலீம் தீவிரவாதிகள் குஜராத்திற்கு வருவதாக” உளவுத் தகவல்களை அனுப்பி, மோடியின்இந்து மதவெறி அரசியலுக்குத் தீனிபோடும் வேலையைத்தான் காங்கிரசு செய்து வந்தது.  தீஸ்தா செதல்வாத், ஹர்ஷ் மந்தேர், மல்லிகா ஷெராவத் போன்றவர்கள்தான் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஆதரவாக, மோடியை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார்கள்.
துக்ளக் சோ போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் போலி மோதல் கொலைகள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியுமே தவிர, சட்டம்  நீதிமன்றம் மூலம் இதனைச் சாதிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.  அரசியல் செல்வாக்குமிக்க இந்து மதவெறி பயங்கரவாதிகளான மோடி, அத்வானி, பால் தாக்கரே போன்றவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது எனும்பொழுது, சோவின் வாதத்தை இக்கும்பலுக்கு நாம் ஏன் பொருத்தக்கூடாது?
___________________________________________