islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டத்தில் கூட்டு குர்பானி


                                           

 சேலம் மாவட்டத்தில் கூட்டு குர்பானி

சேலம் மாவட்டத்தில் இந்த வருடம் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கூட்டு குர்பானிக்காக மொத்தம் 20 மாடுகள் பங்கு சேர்க்கப்பட்டு தலைமை மூலம் கொடுக்கப்பட்ட 1 மாடும் மொத்தம் 21 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

பச்சப்பட்டி கிளை  

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 7 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் 2 கிலோ வீத்ம் குப்பை மேடு,பச்சப்பட்டி,பாத்திமா நகர் போன்ற பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக ஆடு ஒன்று குர்பானி கொடுக்கப்பட்டு 1/2 கிலோ கறி வீதம் 30 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கோட்டை கிளை

சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பாக 5 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் பங்களா தெரு,கோட்டை அண்ணாநகர், ஜாமியாமஸ்ஜித் பின்புறம், லைன்மேடு போன்ற பகுதிகளில் 2 கிலோ வீத்ம் 100 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

சூரமங்களம் கிளை

சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பாக 3 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி  1 கிலோ வீதம் 150 குடும்பங்களுக்கு சேலத்தாம்பட்டி, சூரமங்கள்ம் பகுதிகளில் கொடுக்கப்பட்டது. 

செவ்வாய்பேட்டை கிளை

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை கிளை சார்பாக 5 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் இளம்பிள்ளை,செவ்வாய்பேட்டை பகுதிகளில் 1 கிலோ வீத்ம் 150 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது. 

ஆத்தூர் கிளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் மாநிலத்தலைமைமூலம் பெறப்பட்ட 1 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு,ஆத்தூர்முல்லைவாடி,காட்டுக்கொட்டாய்,கடம்பூர் பகுதிகளில் உள்ள 60 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

 பச்சப்பட்டி கிளை சார்பாக 32 ஆட்டுத்தோல் வசூல்

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 32 ஆட்டுத்தோல் வசூல் செய்யப்பட்டு அதன் மூலம் ஏழைகள் பயன் பெற ரூபாய் -9500/- திரட்டப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நபி வழி பெருநாள் திடல் தொழுகைகள்

சேலம் மாவட்டத்தில் நபி வழி பெருநாள் திடல் தொழுகைகள்
பச்சப்பட்டி கிளை
சேலம் மாவட்டம்  பச்சப்பட்டி கிளை சார்பாக நபி வழி பெருநாள் திடல் தொழுகை பச்சப்பட்டி மஸ்ஜித் தவ்ஹீத் வளாகத்தில் நடை பெற்றது.

இதில் மாவட்டதலைவர் அப்துல் வஹாப் ''தியாகங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 500 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

 

கோட்டை கிளை

சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பில் கலைஞர் கருணாநிதி கல்யாண மண்டப வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் லுக்மான் ஹக்கீம் தாவூதி ''பின்பற்றப்படும் இப்றாஹிம் நபியின் வழிமுறை'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 400 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சூரமங்களம் கிளை

சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மானாஸ் '' இப்றாஹிம் நபியின் ஏகத்துவ உறுதி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 150 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் கிளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் கெங்கவல்லி டாக்டர் அஃப்ஸல் மருத்துவமனை வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் மாவட்ட தொண்டரணி செயளாலர் ஜாகீர் உசேன் '' தியாகச்சுடர் இப்றாஹிம் நபி '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 70 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.