islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டத்தில் நபி வழி பெருநாள் திடல் தொழுகைகள்

சேலம் மாவட்டத்தில் நபி வழி பெருநாள் திடல் தொழுகைகள்
பச்சப்பட்டி கிளை
சேலம் மாவட்டம்  பச்சப்பட்டி கிளை சார்பாக நபி வழி பெருநாள் திடல் தொழுகை பச்சப்பட்டி மஸ்ஜித் தவ்ஹீத் வளாகத்தில் நடை பெற்றது.

இதில் மாவட்டதலைவர் அப்துல் வஹாப் ''தியாகங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 500 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

 

கோட்டை கிளை

சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பில் கலைஞர் கருணாநிதி கல்யாண மண்டப வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் லுக்மான் ஹக்கீம் தாவூதி ''பின்பற்றப்படும் இப்றாஹிம் நபியின் வழிமுறை'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 400 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சூரமங்களம் கிளை

சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மானாஸ் '' இப்றாஹிம் நபியின் ஏகத்துவ உறுதி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 150 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் கிளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் கெங்கவல்லி டாக்டர் அஃப்ஸல் மருத்துவமனை வளாகத்தில்  நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் மாவட்ட தொண்டரணி செயளாலர் ஜாகீர் உசேன் '' தியாகச்சுடர் இப்றாஹிம் நபி '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் சுமார் 70 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 



No comments:

Post a Comment