islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பால் அருந்தினால் பலசாலி ஆகலாம்!



நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.


ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.

மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால் பொருட்களை உட்கொண்டவர்களுக்கு,அதனை உட்கொள்ளாதவர்களைக் காட்டிலும் 38% உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.
inneram

No comments:

Post a Comment