islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மோடியைப் புகழ்ந்ததை ஹசாரே வாபஸ் பெறுவார்: சுவாமி அக்னிவேஷ்



தான் சேகரித்துவைத்திருக்கும் தகவல்களை அளித்தபின்னர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியதை அண்ணா ஹசாரே வாபஸ் பெறுவார் என சமூக நல ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார்.


குஜராத் குறித்து அவருக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என நானும் மற்ற சமூக நல ஆர்வலர்களும் கருதுகிறோம் என்று அக்னிவேஷ் ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹசாரேயின் கருத்து சில விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. தகவல்களின் அடிப்படையில் இல்லை என்பதை நாட்டில் உள்ள அனைத்து சமூக நல ஆர்வலர்களுக்கும் தெரியப்படுத்த தேவையான தகவல்களை சேகரித்திருப்பதாக அக்னிவேஷ் மேலும் தெரிவித்தார்.

தனக்கு முழுத் தகவல் கிடைத்தால், அதை உண்மை என்று ஏற்றுக்கொள்வேன் என ஹசாரே நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் மோடியைப் புகழ்ந்து பேசியதை வாபஸ் பெற முடியும் என அக்னிவேஷ் குறிப்பிட்டார்.

இன்று தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். அதை அண்ணா ஹசாரேவிடம் நாளை அளிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து மோடியைப் புகழ்ந்து பேசியதை அண்ணா ஹசாரே வாபஸ் பெறுவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அக்னிவேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment