islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா



தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.


2006-ல் திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) பொதுச்செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

2009 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமுமுக எடுத்ததால் 9-6-2009-ல் வாரியத்தின் தலைவர் பதவியை ஹைதர் அலி ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக 10-6-2009-ல் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக அரசு பதவியேற்றுள்ள நிலையில் தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.

No comments:

Post a Comment