islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தடையை மீறி சமிதி ஊர்வலம்: ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கைது


தடையை மீறி ராஷ்ட்ர சேவிகா சமிதி ஊர்வலம் நடத்தியதற்காக திருப்பூரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 6 பேரை தெற்கு போலீஸôர் கைது செய்தனர்.

÷ஆர்எஸ்எஸ்சின் பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் மாநிலப் பயிற்சி முகாம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றது. முகாமின் நிறைவுநாளையொட்டி திருப்பூரில் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்படப்பட்டிருந்தது. அதற்கு போலீஸôர் அனுமதி மறுத்திருந்தனர். ÷இருப்பினும், தடையை மீறி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு ஊர்வலம் துவங்கியது.

÷தாராபுரம் சாலை, செவந்தாம்பாளையம் பிரிவிலுள்ள எவரெடி மைதானத்துக்கு ஊர்வலம் செல்ல இருந்த நிலையில், திருப்பூர் தெற்கு போலீஸôர் ஊர்வலத்தைத் தடுத்தனர்; ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த 6 முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர்.

இதையடுத்து, எவரெடி மைதானத்தில் ராஷ்ட்ர சேவிகா சமிதியின் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment