islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் பேனாத் திருட்டு ...!!!!


தென்னமெரிக்காவின் சிலி நாட்டுக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த செக்குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றின் போது பேனா ஒன்றைத் திருடும் காட்சி இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இரு நாட்டுத் தலைவர்களும் சம்பிரதாயமாக பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே பேனாத் திருட்டு நடந்துள்ளது.

சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் கையில் வைத்திருந்த பேனாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்து விட்டு கீழே வைத்தவுடன் செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் அந்தப் பேனாவை எடுத்து தனது பாக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று ஒளிநாடாவில் காட்சிகள் விரிகின்றன.

இணையத்தில் இது குறித்த வீடியோக் காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment