islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஈழம்-இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம்!


வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க கருத்தரங்கில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதியான கலாநிதி அருள்நாதன் பேசுகையில், "இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றதாக அந்த செய்தியில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment