islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஐஐடி நுழைவுத் தேர்வு: கணிதத் தாளில் தவறான கேள்வி?


சமீபத்தில் நடைபெற்ற ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வில், கணிதத் தாளில் தவறான கேள்வி ஒன்று இடம்பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 3 மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளதாக கான்பூர் ஐஐடி இயக்குநர் சஞ்சய் கோவிந்த் தாண்டே கூறியுள்ளார்.

இந்த புகாரை கேள்வித்தாள் தயாரித்த குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புகார் தொடர்பான விசாரணை முடிந்தபின்னர், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் சஞ்சய் கோவிந்த்.

எனினும், ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 25-ம் தேதி, ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 10-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
dinamani

No comments:

Post a Comment