islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பிரான்ஸில் பர்தா அணிய தடை



பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடியபடி சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸôருக்கு அதிகாரம் அளிக்கப்ட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இத்தகைய தடை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை (ஏப்ரல் 11) இப்புதிய தடை அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸில் மொத்தம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 2,000 பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து செல்வதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரபு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் சில பகுதிகளில் மட்டும் முகத்தை மூடியபடி பர்தா அணியும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸி விதித்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக சில சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரையறுக்கப்படாததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் முகத்தை மூடிச் சென்றாலும் அபராதம் விதிக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது.

இருப்பினும் இந்த முடிவை வரவேற்போரும் பிரான்ஸில் உள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுவதுமாக மூடிச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டத்தின்படி முகத்தைக் காட்ட மறுக்கும் பெண்களை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை அடையாளம் கண்டபிறகு அபராதம் விதிக்கப்படும். பர்தாவால் முகத்தை மூடிச் செல்லும் பெண்களுக்கு 216 டாலர் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர் விழிப்புணர்வு வகுப்புக்கு அனுப்பப்படுவார்.

வேண்டும் என்றே வலுக்கட்டாயமாக முகத்தை மறைத்துச் செல்வோர், மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போர், வன்முறையில் ஈடுபடுவோர் என தெரிந்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இத்தகையோருக்கு 30 ஆயிரம் யூரோவும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமல்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால் இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை நடத்தியபிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகே முகத்தை மட்டும் மூடிச் செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய தடைக்கு அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒஸôமா பின் லேடன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்துடன் பிரான்ஸ் மோதுகிறது. எனவே பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment