islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழக சட்டசபை தேர்தல்: 75% வாக்குப் பதிவு


தமிழக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியதோடு, சில இடங்களில் ஓட்டுப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இத்தகைய வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது.5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு,டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை.தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment