islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மனிதன் .......மனிதன்தான்....!!!!!




மனிதன் எந்த காலத்திலும் மனிதன்தான் ஒருக்காலும் மனிதன் கடவுளாக மாற முடியாது என்று இஸ்லாம் மக்களிடம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது. இதை விளங்காத மக்கள் மனிதனை பகவானாக நினைத்து அவருக்கு எல்லா ஆற்றலும் உள்ளது என்று நம்பிக்கை வைத்து ஸ்ரீ சாய்பாபாவை கடவுளாக மதித்து வழிபட்டு வழிகெட்டு வருகின்றனர்.அவரும் மக்களின் அறியாமைய-ஐ பயன் படுத்தி ஒரு சில தந்திர வேலைகளை கற்று மக்களை ஏமாற்றி வந்தார் இன்றைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

இறைவன் தனது திருமறையில் கூறுவதைப்பாருங்கள்..

وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ

7:192. அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.

وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ

7:197. அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.

சீடர்களால் பகவான் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ சத்யசாய் பாபா பிரசாந்தி நிலையத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு 85 வயதாகிறது.

மூச்சுத்திணறல் காரணமாக மார்ச் 28-ம் தேதி அவர் இங்கு சேர்க்கப்பட்டார். அது முதல் அவருடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக சிகிச்சையை ஏற்காமல் செயலிழந்து வருகின்றன. இப்போது செயற்கை முறையில் சுவாசிக்கிறார். சிறுநீரகங்களைச் செயற்கை முறையில் இயக்கி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் ஸ்ரீ பிரசாந்தி நிலையம் இருக்கிறது.

திங்கள்கிழமை மாலை டாக்டர்கள் அளித்த சிறப்பு அறிக்கையில், பாபாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சைக்கு ஓரளவே பலன் கிடைத்து வருவதாகவும் அவர் இயல்பு நிலையை அடைய தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment