islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் பலி 45ஆக உயர்வு





பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகர் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கியாஸ் வெடித்தது. இதில் முதலில் 5 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகின. 46 பேர் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.

இப்போது உயிரிழப்பு தற்போது 45ஆக உயர்ந்து உள்ளது. இது தொடர்பாக மாநில நீர்ப்பாசன மந்திரி அஸ்லாம் பிசென்ஜோ சட்டசபையில் கூறுகையில், 45 சுரங்கத் தொழிலாளர்கள் பலியானதாக தெரிவித்தார்.

மேலும் 24 பேரின் சடலங்களை மீட்கப்பட்டதாகவும், மற்றவர்களின் சடலங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment