islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இளம் பெண்களிடம் பாலியல் சேட்டை : அமெரிக்க இந்து மத சாமியாருக்கு தண்டனை





அமெரிக்காவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு, தண்டனை வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் "பர்சனா தாம்' என்ற ஆஸ்ரமம் உள்ளது.



90ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். இந்த ஆஸ்ரமத்தின் நிறுவனர் பிரகாஷானந்த் சரஸ்வதி. தற்போது 80 வயதாகும் பிரகாஷானந்த் மீது ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த இரண்டு இளம் பெண்கள் கற்பழிப்பு புகார் செய்தனர்.

தங்களை 12 வயது முதல் பாலியல் ரீதியாக இந்த சாமியார் கொடுமை படுத்தியதாக இந்த பெண்கள் கடந்த 2008ம் ஆண்டு புகார் செய்தனர். 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தின் பேரில் இவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 31 வயதான கேத்தி டோனிசென் என்ற பெண் தன்னிடம் சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பிரகாஷானந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment