islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஹோஸ்னி முபாரக்






எகிப்தில் 30 ஆண்டுகளாக ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தார். அவர் பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

17 நாட்கள் நடை பெற்ற போராட்டத்துக்குப் பிறகு அவர் பதவி விலகினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டனர்.



இந்த நிலையில் பதவியில் இருந்த போது ஊழல் மற்றும் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்ததாக தகவல் வெளியாகின. தற்போது அவருக்கு ரூ.3.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவை மறைமுகமாக வங்கி கணக்குகள், ஆடம்பர பங்களாக்கள், ஓட்டல்களாக உள்ளன. இந்த தகவலை லண்டனில் இருந்து வெளி வரும் “கார்டியன்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

முபாரக்கிற்கு அமெரிக்காவின் மங்காட்டன், பிவர்லிகில்ஸ் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்துள்ளார். இவை தவிர பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ளார்.

வெளிநாட்டு கம்பெனிகளில் பணம் முதலீடு செய்துள்ளார். இதையெல்லாம் கணக்கீட்டால் அவருக்கு ரூ.3 கோடியை ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கலாம் என இங்கிலாந்தின் துர்காம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் தெரிவத்துள்ளார்.

மெக்சிகோவை சேர்ந்த பிரபல வர்த்தகரின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடியாகும். எனவே இவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் என அழைக்கப்பட்டார். அவருக்கு அடுத்தப் படியாக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் 2 வது இடத்தில் உள்ளார்.

அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி. ஆனால் இவர்களையெல்லாம் முபாரக் மிஞ்சி விட்டார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி என்பதால் தற்போது இவரே உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்கிறார்.

No comments:

Post a Comment