islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

காஞ்சனா படம் பார்த்த பள்ளி மாணவன் பயத்தில் தற்கொலை!

                                               

ஈரோடு நகரத்தில் உள்ள, ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன். பதினைந்து வயதுடைய இளவரசன் ஒரு அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளவரசனும் அவனது நண்பர்களும் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற திரைப்படம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.


அன்று முதல் பேய் பயத்தில் இருந்துள்ள இளவரசன், இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டு இருக்கிறான். அவனை அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்குவதற்கான நடவடிக்கையாக கோவிலுக்கு சென்று திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்கு கொடுத்துள்ளனர்.


கடந்த 4ம் தேதி இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டான்.


தீக்காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசனுக்கு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 06.09.2011 அன்று காலை இளவரசன் உயிரிழந்தான்.


இளவரசனின் தற்கொலைக்கான காரணம் பற்றி இளவரசனின் அப்பா தண்டபாணி, காஞ்சனா திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பின்னர் சி.டி.யை வாங்கி வந்து வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் போட்டு பலதடவை பார்த்தான்.

ஏதோ ஒரு உருவம் தன் கண்முன்னால் வந்து நிர்ப்பாதாக எங்களிடம் சொன்னான்,
பள்ளிக்கூடத்திலும் யாரிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்துள்ளான். அதற்கு தலைமை ஆசிரியர் உன் அப்பாவையோ, அம்மாவையோ நாளைக்கு கூட்டிக்கொண்டு வா.... என்று சொல்லியானுப்பியுள்ளார்.


எங்களிடம் எண்ணை கொன்று விடுங்கள் எனக்கு பயமாக உள்ளது என்று சொன்னான், நாங்கள் அவனுக்கு தைரியம் சொல்லிவந்தோம், சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், தனியறையில் படுத்திருந்த இளவரசன் நடு ராத்திரியில் எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டு வாசலுக்கு வந்து விட்டான். அதற்க்குப் பின்னர்தான் எங்களுக்கு தெரிந்து சாக்கை எடுத்து வந்து மூடி அவனது உடலில் எரிந்து கொண்டிருந்த “தீ”யை அனைத்தோம் என்று சொன்னார்.


இளவரசனின் தீக்குளிப்பு பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.


No comments:

Post a Comment