islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம் =சல்மான் குர்ஷித்

                           
''கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்'' என மத்திய சட்டத்துறை அமைச்சர்  சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இதன்படி கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வகையில் இதில் புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று  சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இது போன்ற சட்டங்கள் பல இருந்தாலும் அவை ஒழுங்காக நடைமுறை படுத்தப்படுவதில்லை. அதனால்தான் நாட்டில் லஞ்சம், ஊழல், வன் முறை போன்ற செயல்கள் தலை விரித்தாடுகின்றன.

இந்த சட்டம் உண்மையிலேயே கொண்டுவரப்பட்டு நடை முறை படுத்தப்பட்டால் மோடிபோன்ற மத பயங்கர வாதிகள் ஆட்சிக்கு வர முடியாமல் மக்கள் நிம்மதியாகவாழ்வதற்கு வழி பிறக்கும்.
அ.அபதுல் வஹாப்,சேலம்.

No comments:

Post a Comment