islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மவ்லுத் நோட்டீஸ் விநியோகம்



இஸ்லாமியர்களால் தமிழகத்தில் பல வருடங்களாக பக்தி பரவசத்துடன் ஓதிவரும் ''சுப்ஹான மவ்லிதின்'' வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் ''தேங்கை சர்புத்தீன்'' என்ற மவ்லவி எழுதிய ''சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்'' என்ற புத்தகத்திலிருந்து அவரது கருத்தை எடுத்து எழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை என்ன என்பதை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். என்ற காரணத்தினால் அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல துண்டு பிரசுரங்களாக சேலம் பச்சபட்டி கிளை சார்பாக அச்சடித்து சேலம் மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment