islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சாய் பாபாவின் ரகசிய அறையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி நகைகள்


மரணித்த சர்ச்சைக்குரிய சாமியார் சாய் பாபாவின் ரகசிய அறையில் 98 கிலோ தங்கமும்,(மதிப்பு ரூ-201610000.) 307 கிலோ வெள்ளியும்,(மதிப்பு ரூ-17500000.) 11.56 கோடி ரூபாயும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சாய்பாபாவின் ரகசிய அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அப்பொழுது அங்கு கோடிக்கணக்கான ரூபாயும், தங்கம், வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது.

கடந்த மார்ச்-28-ஆம் தேதி மருத்துவமனையில் சாய் பாபாவை உடல் நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்ட பிறகு யஜுர்மந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சர்ச்சைக்குரிய சாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர் வேத மந்திரினுள் சென்றனர். அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போன போது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

No comments:

Post a Comment