islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மோசமான சூறாவளியால் உருக்குலைந்து போன அலபாமா நகரம்



அமெரிக்காவில் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான சூறாவளி புயல் வீசி வருகிறது.

இதனால் அலபாமா, அர்கன்காஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் காற்று சுழன்று வீசுவதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

சுனாமி போன்று காற்று வீசுவதால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. இதனால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி சிதறி கிடக்கின்றன. இந்த சூறாவளி புயலில் அலபாமா மாகாணம் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு மட்டும் சுமார் 162 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அலபாமாவில் துஸ்காலீ சியா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டுள்ளது. குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.

இதே நிலை தான் சூறாவளி புயல் பாதித்த ஜார்ஜியா, மிசிசிப்பி மாகாணங்களிலும் உள்ளது. புயல் மழைக்கு இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் தொடர்ந்து புயல் வீசுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே புயல் பாதித்த அலபாமா, ஆர்கன் சாஸ் கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, ஒகல கோமா ஆகிய 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட வரும்படி அம்மாகாண கவர்னர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே புயல் பாதித்த மாகாணங்களில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே விர்ஜீனியா, மேரிலேண்டு, அட்லாண்டிக் உள்ளிட்ட 21 கடற்கரை மாகாணங்களிலும் தட்பவெப்ப நிலை மோசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

newsonews

No comments:

Post a Comment