islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உய்குர் முஸ்லிம்களை சீனா அடக்குகிறது



சீனாவின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசமான சிங்ஸியாங்கின் அமைதியைக் குலைத்த சம்பவங்கள் நிகழ்ந்து இரு வருடங்கள் கடந்து விட்டன.

சீன அரசு பொருத்தியுள்ள கண்காணிப்புக் கெமராக்களும் அதன் கைது நடவடிக்கைகளும் அங்குள்ள முஸ்லிம் மக்களது குரல்களை வெளிவராது தடுத்து வைத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை அதன் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சிங்ஸியாங்கின் தலைநகரமான உரும்கியில் 2009 ஜூலையில் வன்முறை வெடித்த்து. இதில் 200 பேர் இறந்ததோடு 1700 பேர் காயமடைந்தனர். இதன் விளைவாக சீன அரசு 17000 கண்காணிப்புக் கெமராக்களை மேலதிகமாகப் பொருத்தியது. ஏற்கனவே அங்கு பல ஆயிரக்கணக்கான கெமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை சீன அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு சிங்ஸியாங் நல்ல உதாரணம். இங்கு தமது சொந்த மண்ணில் உய்குர் முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாறி வருகின்றனர்“ என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஸாம் ஸரீபி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment