islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம்--நித்தி - ரஞ்சி படத்திற்கு செருப்படி





சேலம் பெரியார் சிலை அருகே திடு திடுப்பென சிவப்பு சேலையுடன் திரண்ட பெண்கள் 'நித்யானந்தா படத்தையும் ரஞ்சிதா படத்தையும் செருப்பால் அடித்தனர். சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.

ஆன்மிகம் என்ற போர்வையில் வியாபாரம் செய்தும், நடுத்தர வர்க்க மக்களை சிந்தனை ரீதியாக மழுங்கடித்தும் வருகிறார் நித்யானந்தா. அதை கண்டிக்கும் விதமாக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றபடியே மீண்டும் செருப்பால் அடிக்க தொடங்கினர் இதை வேடிக்கை பார்த்த மக்களும் நல்லா அடிக்கனும்ங்க கடவுள் பேருல காம களியாட்டம் நடதுரானே என்று முனு முணுத்தபடி சென்றனர்.


சேலம் மாவட்ட செயலாளர் காந்தம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் கலந்து கொண்டனர்.









nakkeeran

No comments:

Post a Comment