islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

                    
சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அதை விட மறைப்பதற்குத் தகுதியான உறுப்பையே மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்க முடியாது.


மறைத்தல் என்பது இரு வகையில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று மற்றவர்களின் கண்களில் படாமல் மறைப்பது. மற்றவர்களின் கண்களில் இருந்து மறைப்பதற்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். தனக்குத் தானே மறைப்பது குறித்து எதுவும் கூறவில்லை.

حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن حذيفة قال رأيتني أنا والنبي صلى الله عليه وسلم نتماشى فأتى سباطة قوم خلف حائط فقام كما يقوم أحدكم فبال فانتبذت منه فأشار إلي فجئته فقمت عند عقبه حتى فرغ

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த ஒரு குலத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பது போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை (த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.

புஹாரி 225

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்றால் நிச்சயம் முட்டுக்காலை மறைத்திருக்க முடியாது. ஆனால் கால்களுக்கும் மேல் ஆடை தூக்கப்பட்டிருப்பதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஹுதைபா (ரலி) அவர்களை அருகில் அழைத்து தம்மை மறைத்துக் கொள்ளச் சொல்லியுள்ளனர். ஒரு சுவரை நோக்கி சிறு நீர் கழித்தார்கள் என்று இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் சுவர் இருந்ததால் ஆடை தூக்கப்பட்டதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பின்புறம் இருந்து யாராவது பார்க்கக் கூடாது என்பதற்காக மறைத்துக் கொள்ள்ச சொல்லியுள்ளனர்.

மேலும் தரைக்கு நெருங்குவ்தற்கு முன்னால் ஆடையை உயர்த்த மாட்டார்கள்  என்று தாரமியில் ஹதீஸ் உள்ளது.  

حدثنا عمرو بن عون عن عبد السلام بن حرب عن الأعمش عن أنس أن النبي صلى الله عليه وسلم كان لا يرفع ثوبه حتى يدنو من الأرض قال أبو محمد هو أدب وهو أشبه من حديث المغيرة

தாரிமி 664

தரைக்கு நெருங்கிய உடன் ஆடையை உயர்த்துவார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்காலை மறைக்கும் வகையில் உயர்த்துவார்கள் என்று கூறப்படவில்லை.

மேலும் சிறுநீர் கழித்தல் உடலுறவு கொள்ளுதல் ஆகியன ஆடையை விலக்கித்தான் செய்ய முடியும். இது குறித்து சிலர் தேவையில்லாமல் குழப்பிக் கொண்ட போது இதைக் கண்டித்து ஒரு வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.
 கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 11:5
  
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும் போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலை குனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

 முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என்று இந்த (11:5ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்' என்பதன் பொருள் என்ன? என்று கேட்டேன். அவர்கள், சிலர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள விரும்பும் போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும் போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகின்றதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

புஹாரி 4681, 4682

மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தல் என்பது மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும் என்ற கருத்தில் தான் மார்க்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

ஆன்லைன்பீஜெ - விலிருந்து  --அ.அப்துல் வஹாப்,சேலம்.

No comments:

Post a Comment