தகவல் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மத்தியபிரதேச ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தனக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் என அச்சுறுத்தி ஐ.பி.எஸ் அதிகாரி பவன் ஸ்ரீவஸ்தவா எழுதிய கடிதத்தை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.