போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
45 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் மஸ்ஜிதில் நுழைய தடை விதிக்குமாறு இஸ்ரேல் ராணுவ அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக மஆன் செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது. முன்பு பல முறை இஸ்ரேல் ராணுவம் அல் அக்ஸா பகுதியில் பலஸ்தீன் போராளிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. போராளிகளுக்கு அஞ்சி 45 வயதிற்கு கீழே உள்ள பலஸ்தீன் முஸ்லிம்கள் அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேலிய ராணுவம் இதற்கு முன்பும் பல முறை தடுத்துள்ளது.
thoothu
No comments:
Post a Comment